ETV Bharat / state

சட்டவிரோதமாகப் போதை மருந்து விற்ற ஆப்பிரிக்கர்கள் சிறையில் அடைப்பு..

author img

By

Published : Dec 28, 2022, 10:41 PM IST

கொகைன், கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்க முயன்ற வழக்கில் ஆப்ரிக்காவைச் சேர்ந்த இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டவிரோதமாக போதை மருந்து விற்ற ஆப்பிரிக்கர்கள் சிறையில் அடைப்பு
சட்டவிரோதமாக போதை மருந்து விற்ற ஆப்பிரிக்கர்கள் சிறையில் அடைப்பு

சென்னை: கிழக்கு கடற்கரைச் சாலையில் போதைப் பொருள் விற்கப்படுவதாக வந்த ரகசியத் தகவலை அடுத்து, கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி இரவு, அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த ககோசா ஸ்டெல்லா என்பவரைப் பிடித்து போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் இருந்து 3 கிராம் கொகைன் போதைப் பொருளைப் பறிமுதல் செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அவரை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் வசித்து வந்த மற்றொரு ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த அஜா காட்வின் சுக்வூவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் 7 கிராம் கொகைனும், ஒன்றரை கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் காட்வின், போதைப் பொருளைக் கடத்தி வந்து, ஸ்டெல்லா மூலம் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து இரு ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமகள், இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.மேலும், காட்வினுக்கு 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், ஸ்டெல்லாவுக்கு 75 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தீண்டாமை: புதுக்கோட்டை கலெக்டர் உட்பட மூவர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.