ETV Bharat / state

இது ஒரு நல்ல மனிதருக்கு வந்த கூட்டம்.. - நடிகை குஷ்பு கண்ணீர் மல்க அஞ்சலி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 29, 2023, 9:29 PM IST

Updated : Dec 29, 2023, 10:19 PM IST

Kushboo: இந்த கூட்டம் ஒரு நடிகருக்கோ, ஒரு அரசியல் தலைவருக்கோ வந்த கூட்டம் அல்ல எனக் கூறிய குஷ்பு, ஒரு நல்ல மனிதருக்கு வந்த கூட்டம் என விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பின் தெரித்தார்.

குஷ்பூ
குஷ்பூ

இது ஒரு நல்ல மனிதருக்கு வந்த கூட்டம்.. - நடிகை குஷ்பு கண்ணீர் மல்க அஞ்சலி!

சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்திற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, கடந்த செவ்வாய்கிழமை சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின்னர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (டிச.28) காலை காலமானார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அங்கு ஆயிரக்கணக்கான பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த குவிந்த நிலையில், பொது அஞ்சலிக்காக இன்று காலை 6 மணி அளவில் விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்திலிருந்து சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, இறுதிச் சடங்கிற்காக தீவுத்திடலில் இருந்து பொதுமக்களின் அஞ்சலியோடு இன்று மாலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு, 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக நடிகை குஷ்பு, விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "விஜயகாந்த்தை இழந்தது எங்கள் வீட்டில் ஒருவரை இழந்ததுபோல் உள்ளது. படப்பிடிப்புத் தளத்திலும் சரி, அவரது வீட்டின் எதிரே இருந்தபோதும் சரி, அவர் இருந்தால் ஒரு பாதுகாப்பான உணர்வு இருக்கும். அவர் நம் மத்தியில் இல்லை என நான் நினைக்க மாட்டேன். ஏனென்றால், எல்லோரின் மனதிலும் அவர் எப்போதும் இருப்பார்.

எப்போதும் ஒருவர் இருக்கும்போது அவர்களது அருமை புரியாது. அவர்கள் போன பிறகே அவர்களது அருமை தெரியும். இந்த கூட்டம் ஒரு நடிகருக்கோ அல்லது ஒரு அரசியல் தலைவருக்கோ வந்த கூட்டம் இல்லை. ஒரு நல்ல மனிதனுக்கு வந்த கூட்டம். இங்கு சிந்துகின்ற ஒவ்வொரு கண்ணீரும், உள்மனதில் இருந்து சிந்துகின்ற கண்ணீர். அவர் என்றுமே எங்கள் மனதில் இருப்பார்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘டார்ச் லைட்ட ரயில் முன்னாடி கட்டி பாம்பன் பாலத்த கடந்தோம்’ - புல்லரிக்கும் நினைவுகளை பகிர்ந்த லோகோ பைலட்!

Last Updated : Dec 29, 2023, 10:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.