ETV Bharat / state

விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிய இலங்கைப் பெண் சென்னையில் கைது

author img

By

Published : Feb 17, 2022, 2:14 PM IST

விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு jரூ.42 கோடி மாற்ற சென்ற போது இலங்கை பெண் விமான நிலையத்தில் சிக்கி இருப்பது என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிய இலங்கைப் பெண் சென்னையில் கைது
விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டிய இலங்கைப் பெண் சென்னையில் கைது

சென்னை:சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாகக் கடந்த அக்டோபர் மாதம் இலங்கை நாட்டைச் சேர்ந்த லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ(40) என்ற பெண்,விமான அலுவலர்களால் கைது செய்யப்பட்டார்.

அவரது கூட்டாளியாக இருந்த ஒரு இந்தியர், 3 இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் கியூ பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இலங்கை பெண் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்டியது தெரியவந்தது. மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சென்னை அண்ணா நகரில் தங்கி அந்த முகவரியை வைத்து ரேஷன் கார்டு, கேஸ் இணைப்பு, இந்திய பாஸ்போர்ட் பெற்றதும் விசாரணையில் அம்பலமானது. தடைச்செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு இருப்பதால் டெல்லி தேசிய புலனாய்வு பிரிவு முகமைக்கு இந்த வழக்கானது மாற்றப்பட்டது.

இதனையடுத்து தேசிய புலனாய்வு முகாமை அலுவலர்கள்,இலங்கை பெண்ணிடம் நடத்திய விசாரணையில், போலி இந்திய பாஸ்போர்ட் மற்றும் பிற போலி ஆவணங்களுடன் பெங்களுரு வழியாக மும்பைக்கு இலங்கை பெண் செல்ல இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக இங்கிலாந்தை சேர்ந்த நபருக்கு சொந்தமான வங்கி கணக்கு ஒன்று மும்பையில் இருப்பதாகவும், அந்த வங்கி கணக்கில் இருந்து ரூ.42 கோடி பணத்தை விடுதலை புலிகள் இயக்கத்தினருக்குத் தொடர்புடைய வங்கி கணக்கிற்கு மாற்ற சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக,மும்பையிலுள்ள வங்கிக் கணக்கு செயலிழந்து உள்ளதாக கூட்டாளிகள் தெரிவித்ததால், வங்கிக் கணக்கை ஆன்லைன் மூலமாக மாற்றுவதற்காக வங்கிக் கணக்கு வைத்திருந்த நபரின் பெயரில் போலியாக சிம் பெற்று மாற்ற முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால் வங்கிக் கணக்கு வைத்திருப்போரின் வாரிசு போல போலி ஆவணங்களைத் தயார் செய்து பணத்தை எடுக்க, மும்பைக்குச் சென்ற போது இலங்கைப் பெண் பிடிப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கியில் இருந்த பணத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள விடுதலை புலிகள் இயக்கத்தினரின் ஆதவாளர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்ற திட்டம் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து, மும்பையில் யார் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது எனவும், உலகம் முழுவதும் பரவி கிடக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தினர் குறித்தத் தகவலை பெற என்.ஐ.ஏ அலுவலர்கள் இலங்கை பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கேரள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.