ETV Bharat / state

சென்னை பெரும்பாக்கத்தில் இளைஞர் சரமாரியாக வெட்டிப்படுகொலை!!

author img

By

Published : May 30, 2022, 4:55 PM IST

சென்னை பெரும்பாக்கத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புப்பகுதியில் இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை பெரும்பாக்கத்தில் இளைஞர் சரமாரியாக வெட்டி படுகொலை
சென்னை பெரும்பாக்கத்தில் இளைஞர் சரமாரியாக வெட்டி படுகொலை

சென்னை: சோழிங்கநல்லூர் அடுத்த பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர், சுந்தரமூர்த்தி(35). டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவர் சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். அவரின் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெரும்பாக்கம் குடிசைப்பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் சுந்தரமூர்த்தியை முகங்களில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த பெரும்பாக்கம் காவல் துறையினர் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

சுந்தரமூர்த்தி பல ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதால், நடந்த கொலையா அல்லது நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னைகளால் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவலர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயபாபு (28) மற்றும் சந்தோஷ் (26) ஆகிய இருவர் செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: அண்ணியை தகாத வார்த்தையால் திட்டி தற்கொலைக்கு தூண்டிய நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.