ETV Bharat / state

உளவுத்துறை ஐஜி ஆசியம்மாள் இடமாற்றம்; புதிய உளவுத்துறை ஐஜியாக செந்தில்வேலன் நியமனம்!

author img

By

Published : Jul 20, 2022, 10:53 PM IST

தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் அளித்தும் மற்றும் 5 பேருக்குப் பதவி உயர்வு வழங்கியும் உள்துறைச்செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் - 5 பேருக்கு பதவி உயர்வு!
தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் - 5 பேருக்கு பதவி உயர்வு!

சென்னை: இதுதொடர்பாக உள்துறைச்செயலர் பிறப்பித்த உத்தரவில், “உளவுத்துறை ஐஜி ஆசியம்மாள் அமலாக்கப்பிரிவு ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே, உளவுத்துறை ஐஜியாக செந்தில்வேலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக மகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல் கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக ஆல்பர்ட் ஜான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி காவல் துறை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சமய் சிங் மீனா, கிரண் ஸ்ருதி, தீபக் ஷிவச், ஹர்ஷ் சிங் மற்றும் சாய் ப்ரணீத் ஆகியோர் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. அதிரடி மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.