ETV Bharat / state

தனியார் நிறுவன பணியாளர் தூக்கிட்டுத் தற்கொலை!

author img

By

Published : Dec 15, 2020, 1:38 PM IST

செங்கல்பட்டு: தாழம்பூர் தனியார் நிறுவன பணியாளர் தூக்கிட்டுத் தற்கொலையால் உயிரிழந்தார்.

தனியார் நிறுவனப் பணியாளர் தற்கொலை  செங்கல்பட்டு மாவட்டச் செய்திகள்  தமிழ்நாடு குற்றச் செய்திகள்  தமிழ்நாடு தற்போதைய செய்திகள்  தமிழ்நாடு தற்கொலை செய்திகள்  Chengalpattu District News  Tamil Nadu Crime News  Tamil Nadu Current News  Tamil Nadu Suicide Cases  Suicide of a private company employee  A Man Suicide In Chengalpattu'  செங்கல்பட்டில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
Suicide of a private company employee

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருமார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (30). இவர் தனது உறவினர் பெண்ணை மணமுடித்து இரு ஆண்டுகள் ஆகின்றன. மனைவி தனது சொந்த ஊரிலேயே தங்கிப் படித்துவந்தார். ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் அடுத்த பொன்மாரில், வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு (டிச.14) ஸ்டாலின் தனது வீட்டிலேயே துாக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதால் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாழம்பூர் காவல் துறையினர் ஸ்டாலினின் உடலைக் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தற்கொலைக்கு மனைவியைப் பிரிந்து வாழ்ந்த விரக்தியா அல்லது வேறு காரணமா என்ற கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஓமலூர் அருகே சாலை விபத்து: சிறுவன் உள்பட இருவர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.