ETV Bharat / state

இனி இந்தக் காளியோட ஆட்டத்த பாக்கத்தான போற! கத்திரி வெயில் 'பராக்'

author img

By

Published : May 4, 2019, 2:19 PM IST

சென்னை: கத்திரி வெயில் இன்று தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு அனல் காற்று அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் அனல் காற்று அதிகரிக்கும்

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள உள் மாவட்டங்கள், சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் அனல் காற்று வீசும்.

அதேபோல் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அதிகபட்ச வெப்பநிலையாக 42 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸும் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கத்திரி வெயில் இன்று தொடங்கியுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனல் காற்று அதிகரிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...

தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்கள் ,சென்னை,
திருவள்ளுவர், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது ...

அதே போல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ....

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அதிகபட்ச வெப்பநிலையாக 42 டிகிரி செல்சியஸ்,குறைந்தபட்ச வெப்பநிலையாக 30டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது....
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.