அரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிமுத்து என்பவரது மனைவி கலைச்செல்வி( 48). நேற்றிரவு கலைச்செல்வி தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் அவரின் தலையை அழுத்திப் பிடித்து தங்கச் சங்கிலியைப் பறித்தனர்.
பயத்தில் அவர் கூச்சலிடவே தோட்டத்திலிருந்த அவரது கணவர் கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றார். ஆனால் அவரை கீழேத் தள்ளிவிட்டு கொள்ளையர்கள் தப்பியோடினர். அதையடுத்து செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: விழுப்புரம் அருகே பூட்டிய வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை!