ETV Bharat / state

ஒரே நாளில் 19 பேருக்கு கரோனா - சிவப்பு மண்டலத்திற்கு மாறிய அரியலூர்

author img

By

Published : May 3, 2020, 12:11 AM IST

அரியலூர்: 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆரஞ்ச் மண்டலத்தில் இருந்த அரியலூர் மாவட்டம், ஒரே நாளில் சிவப்பு மண்டலத்திற்கு மாறியுள்ளது.

ariyalur
ariyalur

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் சென்னை கோயம்பேடு சந்தையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த சில தினங்களாக அரியலூரில் உள்ள தங்களது சொந்த வீட்டிற்கு லாரிகள் மூலம் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்ரல் 30) நமங்குணம் காலனியில் வசிக்கும் 35 வயது நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அரியலூர் மற்றும் செந்துறை தாலுகாவில் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நமங்குணம் கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மூன்று பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட 19 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மற்றவர்கள் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டிலும் அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அரியலூரில் கோயம்பேட்டிலிருந்து வந்த 200க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

சிவப்பு மண்டலமாக மாறிய அரியலூர்

இதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே எட்டு பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 19 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஆரஞ்சு மண்டலத்தில் இருந்த அரியலூர் மாவட்டம், ஒரே நாளில் சிவப்பு மண்டலத்திற்கு மாறியுள்ளது.

இதையும் படிங்க: 'புற்றுநோயாளிகளை கரோனா எளிதில் தாக்கும்'- ஆய்வில் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.