ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக்: 31ஆவது இடத்தில் அதானு தாஸ்

author img

By

Published : Jul 23, 2021, 4:38 PM IST

வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் பிரிவுப் போட்டியின் முதல் பாதி முன்னிலைப் பட்டியலில் இந்திய வீரர்கள் பின்தங்கியுள்ளனர்.

Tokyo Olympics
டோக்கியோ ஒலிம்பிக்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று (ஜூலை 23) தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் பிரிவுப் போட்டியின் முதல் பாதியில் முன்னிலைப் பெற்ற வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில், 329 புள்ளிகளுடன் அதானு தாஸ் 31ஆவது இடத்தையும், பிரவீன் ஜாதவ் (329 புள்ளிகள்), தருண்தீப் ராய் (323 புள்ளிகள்) முறையே 30 மற்றும் 45ஆவது இடங்களையும் பிடித்தனர்.

ஒவ்வொரு வீரரும் தலா 72 அம்புகள் எய்தல் வேண்டும். முதல் பாதி 36 அம்புகள் எய்தலுடன் முடிவடைந்தது. முன்னதாக, பெண்கள் ஒற்றையர் பிரிவில் தீபிகா குமாரி 9ஆவது இடத்தைப் பிடித்திருந்தார்.

இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்- தீபிகா குமாரி அசத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.