ETV Bharat / sports

பாரா ஒலிம்பிக்: வெள்ளி வென்றார் பவினாபென் படேல்

author img

By

Published : Aug 29, 2021, 7:51 AM IST

Updated : Aug 29, 2021, 8:23 AM IST

பவினாபென் படேல்
பவினாபென் படேல்

07:49 August 29

பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி டோக்கியோவில் தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சி-4 பிரிவின் இறுதிப் போட்டி இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்றது.

இதில், இந்திய வீராங்கனை பவினாபென் படேல், சீன வீராங்கனை சோ யிங்கை (Zhou Ying) எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் யிங்கிடம் 0-3 என்ற செட் கணக்கில் பவினாபென் படேல் தோல்வி அடைந்தார்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கம் ஆகும். அவரது வெற்றியை , குடும்பத்தினரும் உறவினர்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். தேசிய விளையாட்டு தினமான இன்று, இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது கூடுதல் சிறப்பாகும்.

இதையும் படிங்க: ஹிட்லர் வியந்த மேஜர் தயான் சந்த்!

Last Updated : Aug 29, 2021, 8:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.