ETV Bharat / sports

சுதந்திர தின விழாவில் இந்திய ஒலிம்பிக் போட்டியாளர்கள்; பிரதமர் திட்டம்!

author img

By

Published : Aug 3, 2021, 7:19 PM IST

டெல்லி செங்கோட்டையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் இந்திய ஒலிம்பிக் போட்டியாளர்களைச் சிறப்பு விருந்தினர்களாக பிரதமர் மோடி அழைக்கவுள்ளார்.

PM Modi
பிரதமர் மோடி

டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு ஒலிம்பிக் தொடரில் இதுவரை இந்தியா 1 வெள்ளி, 1 வெண்கலம் என இரண்டு பதக்கங்களை பெற்றுள்ளன.

மகளிர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். மல்யுத்தப் போட்டிகள் தற்போது தொடங்கியிருக்கும் நிலையில், மல்யுத்தத்தில் நிச்சயமாக ஒரு பதக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையில் ஒலிம்பிக் வீரர்கள்

மேலும், பல இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்திருந்தாலும், மேரி கோம், தீபிகா குமாரி உள்பட பலரும் உலகத்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று ஒட்டுமொத்த இந்திய ஒலிம்பிக் குழுவை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க இருக்கிறார்.

அந்த விழாவிற்கு பின்னர், அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பிரதமர் உரையாட உள்ளார். இதனால், அனைத்து வீரர்களையும் பிரதமர் இல்லத்துக்கும் அழைக்க இருக்கிறார்.

ஒலிம்பிக்கில் இந்தியர்கள் அதிகம்

குஜராத் நலத்திட்ட தொகுப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றுகையில், "இந்த முறை, இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் ஒலிம்பிக்கில் தகுதி பெற்றுள்ளனர். கரோனா காலத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ சென்றுள்ளனர்.

இந்தியர்கள் முதல் முறையாக தகுதிபெற்ற பல விளையாட்டுகள் உள்ளன. தகுதி பெறுவது மட்டுமல்லாமல் பல போட்டிகளை கடுமையாக எதிர்கொண்டிருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: டெல்லியில் பி.வி.சிந்துவிற்கு உற்சாக வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.