ETV Bharat / sports

'செரீனா, ஃபெடரர் டென்னிஸிற்கு திரும்ப காத்திருக்கிறேன்' - கிறிஸ் எவர்ட்

author img

By

Published : Jun 5, 2020, 3:35 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிப்படைந்துள்ள டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் மீண்டும் தொடங்கி செரீனா, ஃபெடரர், நடால் உள்ளிட்ட வீரர்களை களத்தில் காண காத்திருக்கிறேன் என பலமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள முன்னாள் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை கிறிஸ் எவர்ட் தெரிவித்துள்ளார்.

Players like Serena, Federer itching to return to tennis, feels Evert
Players like Serena, Federer itching to return to tennis, feels Evert

கரோனா வைரஸ் காரணமாக உலகில் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வந்தனர்.

மேலும் வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதற்கிடையே தனியார் விளையாட்டு தொலைகாட்சிக்கு பேட்டியளித்த பலமுறை கிறிஸ் எவர்ட், டென்னிஸ் போட்டிகள் மீண்டும் தொடங்குவது குறித்தும், அதற்காக விளையாட்டு வீரர்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், 'நீண்ட காலமாக எந்த ஒரு விளையாட்டு போட்டிகளும் நடைபெறாமல் இருப்பதால் அப்போட்டி மீண்டும் தொடங்கும் சமயத்தில் விளையாட்டு வீரர்கள் அதில் மூழ்கி விடுவார்கள்.

குறிப்பாக டென்னிசில் செரீனா, ரஃபேல் நடால், ரோஜர் ஃபெடரர் ஆகியோர் நிச்சயம் அதனை செய்வார்கள் என நினைக்கிறேன்.

இத்தனை நாள்கள் அவர்கள், தங்கள் குடும்பத்தினருடனும், தங்களது உடற்பயிற்சிகளிலும் நேரத்தை செலவிட்டு வந்தனர். ஆனால் தற்போது கட்டாயம் அவர்கள் தங்களது விளையாட்டுக்கு திரும்ப வேண்டும். அவர்கள் மீண்டும் காலத்திற்கு வந்து விளையாடுவதை காண நான் ஆவலுடன் இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.