ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு!

author img

By

Published : Nov 1, 2020, 3:01 PM IST

Updated : Nov 1, 2020, 3:08 PM IST

சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

IPL 2020: CSK aim to play party poopers vs Punjab while RR look to continue charge for playoffs vs KKR
IPL 2020: CSK aim to play party poopers vs Punjab while RR look to continue charge for playoffs vs KKR

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 53ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்ச தீர்மானித்துள்ளது.

இப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சென்னை: தோனி (கேப்டன்), சாம் கரண், பாப் டூ பிளேசிஸ், ராயுடு, ஜெகதீசன், கெய்க்வாட், ஜடேஜா, தீபக் சாஹர், கரன் சர்மா, லுங்கி இங்கிடி, இம்ரான் தாஹீர்.

பஞ்சாப்: ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், பூரான், மந்தீப் சிங், ஜேம்ஸ் நீஷம், தீபக் ஹூடா, ஜோர்டன், முருகன் அஸ்வின், ரவி பிஸ்னோய், ஷமி.

இதையும் படிங்க:இந்திய அணி வீராங்கனை அஞ்சு தமாங்கின் லாக்டவுன் ஆக்டிவிட்டி!

Last Updated : Nov 1, 2020, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.