ETV Bharat / sports

பர்பிள் கேப்பை கைப்பற்றிய ரபாடா!

author img

By

Published : Apr 7, 2019, 9:20 PM IST

பெங்களூரு : பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக பந்துவீசி நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப்பை டெல்லி அணி வீரர் ரபாடா கைப்பற்றியுள்ளார்.

ரபாடா

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் வீரர்களுக்கு பர்பிள் கேப் வழங்கப்படும். இந்த வருட ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், பர்பிள் கேப்பை வெல்லும் வீரர்கள் மத்தியில் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற டெல்லி - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலானப் போட்டியில் டெல்லி அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அப்போட்டியில் டெல்லி அணியின் வெற்றிபெற ரபாடா முக்கிய காரணமாக திகழ்ந்தார். டெல்லி அணியின் பேட்டிங்கின்போது டி வில்லியர்ஸ், விராட் கோலி, அக்‌ஷ்தீப் நாத் மற்றும் நெகி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதால் பெங்களூரு அணியின் ஸ்கோர் டெல்லி அணியின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்தப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 6 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதால் பர்பிள் கேப் வழங்கப்பட்டது. இவருக்குபின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூரு வீரர் சாஹல் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

Intro:Body:

news


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.