ETV Bharat / sports

என் நாட்டுக்காக மட்டுமே விளையாடுகிறேன் - ரஷீத் கான்!

author img

By

Published : Jun 22, 2019, 8:58 AM IST

லண்டன்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு பதிலளிக்கும் விதமாக அந்த அணியின் ரஷீத் கான், என் நாட்டுக்காகவே விளையாடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ரஷீத் கான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் குழப்பம் ஏற்பட்டு, அது அணியை பாதித்துவருகிறது. தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான சேஷாத் காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் கண்ணீர் மல்க காணொலி வெளியிட்டு அதில், 'உடல் தகுதியுடன் இருக்கும் என்னை ஏன் நீக்கினீர்கள்' என பேசியது ரசிகர்களிடையே சர்ச்சையை கிளப்பியது.

அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக கேப்டன் ஆப்கானை நீக்கிவிட்டு குலாப்தீன் நைப் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதேபோல் உலகக்கோப்பைத் போட்டிகளில் ஆப்கானை அணியில் சேர்க்காதது ரசிகர்களிடையே பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கான் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக கேப்டனை மாற்றியது சரியானது அல்ல; அதேபோல் என்னுடைய பந்துவீச்சுக் குறித்த விமர்சனங்களை நான் ஏற்கிறேன்.

மேலும் கேப்டனுக்காகவோ, கிரிக்கெட் வாரியத்துக்காகவோ நான் கிரிக்கெட் விளையாடவில்லை. எனக்காகவே கிரிக்கெட் விளையாடுகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.