ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி நாளை ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் களமிறங்கவுள்ள 12 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அதில் இடதுகை பேட்ச்மேனான ட்ராவிஸ் ஹெட் நீக்கப்பட்டு ஆல் -ரவுண்டர் மிட்சல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில், இந்த போட்டியில் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரின் தேவை இருப்பதால் ஹெட்டிற்கு பதிலாக மார்ஷ் இணைந்துள்ளார் என்றார்.
மேலும் இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதோடு ஆஷஸ் கோப்பையையும் தக்கவைத்துள்ளதால் இந்த போட்டியிலும் ஆச்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.