ETV Bharat / sitara

'தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது' - எஸ்.பி.பி. சரண் தகவல்!

author img

By

Published : Sep 16, 2020, 3:53 PM IST

சென்னை: தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் டுவீட் செய்துள்ளார்.

SP Charan on SPB's Health: Dad is stable
SP Charan on SPB's Health: Dad is stable

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி, கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கிடையே, எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியன. இதனால், தந்தையின் உடல்நிலை குறித்து எஸ்.பி.பி. சரண் அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று (செப். 16) எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் டுவீட் செய்துள்ளார். அதில், “தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. இருந்தபோதிலும், பிசியோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி எக்மோ, வென்டிலேடர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தந்தை உடல்நிலை சீராக உள்ளது.

மேலும், எம்ஜிஎம் மருத்துவமனையைச் சேர்ந்த அனைத்து மருத்துவர்களுக்கும், தந்தை குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க...வேதா நிலையம்: ஆளுநர் பிறப்பித்த அவசர சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.