ETV Bharat / sitara

உங்கள் செயலுக்கான முடிவை அவளே பார்த்துக்கொள்வாள் - 'திரௌபதி' இயக்குநர் ஆவேசம்!

author img

By

Published : Mar 10, 2021, 10:52 PM IST

தனுஷின் 'கர்ணன்' படத்தில் வரும் பாடல் தலைப்பு சர்ச்சை குறித்து 'திரௌபதி' பட இயக்குநர் ஆவேசத்துடன் ட்வீட் செய்துள்ளார்.

draupathi
draupathi

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜினா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை (மார்ச் 11) வெளியாகிறது. இப்பாடலுக்கு 'திரௌபதியின் முத்தம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

  • அவரவர் எண்ணம் போல் அவரவர் வாழ்க்கை அமையும். அவரவர் சிந்தனை போல அவரவர் செயல்கள் அமையும்..
    அக்னிக்கு எதுடா சுத்தம் அசுத்தம் எல்லாம்.. அக்னி தாய்க்கும் அப்படித்தான்.. யாரலும் அசுத்த படுத்த முடியாது.. உங்கள் செயலுக்கான முடிவை அவளே பார்த்து கொள்வாள்.. pic.twitter.com/UoCRz19P4r

    — Mohan G Kshatriyan 🔥 (@mohandreamer) March 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இத்தலைப்பைப் பார்த்த நெட்டிசன்கள் 'திரௌபதி' பட இயக்குநர் மோகன் ஜியை டேக் செய்து கிண்டல் அடித்துவருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

அதில், "அவரவர் எண்ணம்போல் அவரவர் வாழ்க்கை அமையும். அவரவர் சிந்தனைபோல அவரவர் செயல்கள் அமையும். அக்னிக்கு எதுடா சுத்தம் அசுத்தம் எல்லாம் அக்னித்தாய்க்கும் அப்படித்தான் யாராலும் அசுத்தப்படுத்த முடியாது. உங்கள் செயலுக்கான முடிவை அவளே பார்த்துக்கொள்வாள்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கர்ணன் படத்தின் 3வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.