ETV Bharat / sitara

4 வருடமாக வளர்த்த முடியை தானம் செய்த விக்ரமின் தங்கை மகன்!

author img

By

Published : Sep 17, 2021, 9:16 AM IST

நடிகர் விக்ரமின் தங்கை மகன் அர்ஜுமன் 4 வருடமாக தான் வளர்த்துவந்த முடியை தானமாக கொடுத்துள்ளார்.

விக்ரமின் தங்கை மகன்
விக்ரமின் தங்கை மகன்

சென்னை: சீயான் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமன் முரளி பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) படத்தின் மூலம் திரைத்துறையில் நுழையவுள்ளார். 'தாதா 87' பட இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கி வரும் இப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அர்ஜுமன்

இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வரும் பப்ஜி விளையாட்டு, போல அதிபயங்கரமான விளையாட்டை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.

இப்படத்தில் வரும் ஒரு காட்சிக்காக அர்ஜுமன் 4 ஆண்டுகளாகத் தான் வளர்த்து வந்தமுடியை வளர்த்துள்ளார். படப்பிடிப்பில் வைத்து அவரது தலை முடி வேடப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் வெட்டப்பட்ட முடியை அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தானமாகக் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: ’உன் பார்வையில் விழுந்த நாள் முதல்’.... #HBDப்ரியா ஆனந்த்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.