ETV Bharat / sitara

ரியா சக்ரவர்த்தியின் பிணை மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போதைப்பொருள் தடுப்பு முகமை வாதம்

author img

By

Published : Sep 29, 2020, 7:17 PM IST

ரியா சக்ரவர்த்தி, ஷோவிக் சக்ரவர்த்தி இருவரும் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு போதை மருந்து விநியோகிக்கும் கூட்டமைப்பு ஒன்றில் நீண்ட கால உறுப்பினர்களாகவும், பல விநியோகிஸ்தர்களுடன் தொடர்பில் இருந்தும் வந்துள்ளதாக போதை மருந்து தடுப்பு முகமை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ரியா சக்கரவர்த்தி ஷோவிக் சக்கரவர்த்தி
ரியா சக்கரவர்த்தி ஷோவிக் சக்கரவர்த்தி

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி ஆகியோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பிணைக் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு முகமை அவர்களது பிணை மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரியா சக்ரவர்த்தி, ஷோவிக் சக்ரவர்த்தி இருவரும் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு போதை மருந்து விநியோகிக்கும் கூட்டமைப்பு ஒன்றில் நீண்ட கால உறுப்பினர்களாக இருந்து வருவதாகவும், பல விநியோகிஸ்தர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் இது குறித்து, போதை மருந்து தடுப்பு முகமை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், ரியா சக்ரவர்த்தியும் அவரது சகோதரரும் போதைப்பொருள் பரிவர்த்தனைகளுக்கு நிதியளித்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, போதைப்பொருள் மற்றும் சைக்கோட்ராபிக் பொருள்கள் (Narcotic Drugs and Psychotropic Substances) சட்டத்தின் கடுமையான பிரிவான 27ஏ வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த வாரம் இது குறித்து வாதிட்ட ரியா சக்ரவர்த்தியின் வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே, ரியா, அவரது காதலரும் நடிகருமான மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் உட்கொண்ட போதை மருந்துகளுக்கு எப்போதாவது மட்டுமே பணம் செலுத்தி வந்தததால், தற்போதைய வழக்கில் இந்தப் பிரிவு பொருந்தாது என்று வாதிட்டார்.

மேலும் இந்த வழக்கில் இதுவரை வெறும் 59 கிராம் போதைப் பொருள்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இது வணிகத்திற்கான அளவு அல்ல, எனவே பிரிவு 27ஏ இவ்வழக்கில் பொருந்தாது என்றும் வாதிட்டார்.

கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி, நீதிபதி சாரங் கோட்வாலின் தலைமையிலான அமர்வு, ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது சகோதரரின் பிணை மனுக்களுக்கான தங்களது பதிலை போதை மருந்து தடுப்பு முகமையை தாக்கல் செய்யக் கோரி பரிந்துரைத்தது.

மேலும் சட்டப்பிரிவு 27ஏ, இவ்வழக்கில் அதன் அவசியம் ஆகியவை குறித்து விரிவாக பதிலளிக்குமாறும் நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.