ETV Bharat / jagte-raho

இளைஞரை கொடூரமாக கொலை செய்த ஆறு பேருக்கு காவல் துறை வலைவீச்சு

author img

By

Published : Aug 26, 2019, 9:44 PM IST

திருவள்ளுவர்:  முன்விரோதம் காரணமாக  இளைஞரை கொடூரமாக வெட்டிக் கொன்ற ஆறு பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

gang murder

திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த பாடியநல்லூர் அருகே உள்ள காந்தி நகர் சர்ச் தெருவில் முனியாண்டி என்பவர் குடும்பத்துடன் வசித்துவருகிறர். இவருக்கு பிரசாந்த் என்கிற மகன் உள்ளார். அவர் ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால் இயேசு நாதர் தேவாலயம் முன்பு உள்ள விளையாட்டு திடலில் வாலிபால் விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு ஆறு பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து, விளையாடிக் கொண்டிருந்த பிரசாந்தை அரிவாளால் வெட்ட முயன்றனர். அப்போது உடன் விளையாடிக் கொண்டிருந்த அனைவரும் அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்கு ஓடியதால் அந்த கும்பலிடம் தனியாக மாட்டிக்கொண்ட பிரசாந்தை அரிவாளைக் கொண்டு கொடூரமாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

a six person gang murder to young man  6 பேர் கொண்ட கும்பல் ஒரு இளைஞரை வெட்டியது
கொலை செய்யப்பட்ட பிரசாந்த்

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலையடுத்து, விரைந்து வந்த சோழவரம் காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, பிரசாந்தை கொலை செய்ததன் காரணம் முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பொன்னேரி மருத்துவமனை

மேலும், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஏற்கனவே சோலையம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த 17ஆ ம்தேதி மாதவரத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

Intro:திருவள்ளூர் அருகே வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தபோது
6 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக கொடூரமாக இளைஞரை
வெட்டிக் கொன்ற கும்பல் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்


......Body:திருவள்ளூர் அருகே வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தபோது
6 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக கொடூரமாக இளைஞரை
வெட்டிக் கொன்ற கும்பல் போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்


திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் அடுத்த காந்தி நகர்
சர்ச் தெருவில் வசித்து வருபவர் முனியாண்டி இவரது மகன் பிரசாந்த் விடுமுறை நாளான இன்று தனது நண்பர்களுடன் இயேசு நாதர் தேவாலயம் முன்பாக உள்ள விளையாட்டு திடலில் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே புகுந்து விளையாடிக் கொண்டிருந்த பிரசாந்தை அரிவாளால் வெட்ட வந்தது பயந்து விளையாடிக் கொண்டிருந்த அனைவரும் அங்கிருந்து ஓடவே குடியிருப்பு பகுதியை ஒட்டிய புல்வெளியில் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே
ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சோழவரம் போலீசார் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தேடி வருகின்றனர் பிரசாந்த்தை முன்விரோதம் காரணமாக கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் உயிரிழந்த பிரசாந்தின் மாமா சேதுபதியை கோஸ்டி மோதலில் கொல்ல வந்தவர்கள் இவரை கொலை செய்துள்ளதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்
மேலும் ஏற்கனவே சோலையம்மன் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் கடந்த 17 ஆம்தேதி மாதவரத்தில்
வெட்டி படுகொலை
செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இவரை கொன்றனரா ? என்ற கோணத்திலும் சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தபோது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து 6 பேர் கொண்ட கும்பல் கத்தியால் பிரசாந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துயுள்ளது......Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.