ETV Bharat / jagte-raho

வருமான வரித்துறை அலுவலர் வீட்டில் சிபிஐ சோதனை

author img

By

Published : Dec 31, 2019, 12:27 PM IST

சேலம்: நிதி நிறுவன மோசடி தொடர்பாக, சேலத்தில் வருமான வரித்துறையினர் வீட்டில் சிபிஐ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

cbi raid
cbi raid

பெங்களூரில் ஐ.எம்.ஏ நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட மன்சூர் கான் என்பவர் டெல்லியில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அரசு அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் 15க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் வீட்டில் சிபிஐ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

சேலத்தை பூர்வீகமாக கொண்ட வருமான வரித்துறை உதவி ஆணையராக பெங்களூருவில் பணியாற்றி வரும் குமார் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்ததாக மன்சூர் கான் கூறியதை தொடர்ந்து, பெங்களூரில் உள்ள குமார் வீட்டில் சிபிஐ அலுவலர்கள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

வருமான வரித்துறை அலுவலர் வீட்டில் சோதனை செய்த சிபிஐ

இதன்தொடர்ச்சியாக, சேலம் அழகாபுரத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலர் குமாருக்கு சொந்தமான வீட்டில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை நான்கு பேர் கொண்ட சிபிஐ அலுவலர்கள், சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் பார்க்க : தொழிலதிபர் வீட்டில் சிபிஐ ரெய்டு: வங்கி மோசடியில் திடீர் திருப்பம்

Intro:ஐ எம் ஏ நிதி நிறுவன மோசடி தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அந்நிறுவன உரிமையாளர் மன்சூர் கொடுத்த தகவலின் பேரில் சேலத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Body:பெங்களூரில் தனியார் நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட மன்சூர் கான் டெல்லியில் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தியதில் பல அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அவர் கூறியதின் பெயரில் 15-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சேலத்தை பூர்வீகமாக கொண்ட வருமான வரித்துறை உதவி ஆணையராக பெங்களூருவில் பணியாற்றி வரும் குமார் என்பவருக்கு லஞ்சம் கொடுத்ததாக மன்சூர் கான் கூறியதின் பெயரில் பெங்களூரில் உள்ள அவரது வீடும் மற்றும் தோட்டத்தில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதனடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரி குமாருக்கு சொந்தமான வீடு சேலம் அழகாபுரம் உள்ள வீட்டில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை நான்கு பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு சோதனை செய்து சென்றுள்ளனர். ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.