ETV Bharat / jagte-raho

5 மாத பெண் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற கொடூரம்!

author img

By

Published : Feb 1, 2020, 1:46 PM IST

Updated : Feb 1, 2020, 8:20 PM IST

சென்னை: பிறந்து ஐந்து மாதமே ஆன பெண் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற நபரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

five-month-baby
five-month-baby

சென்னை ஓட்டேரி மங்கலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் டார்வின் ராஜ் (48). இவர் ஆட்டோ ஓட்டுநராகத் தொழில் செய்துவருகிறார். இவர் நேற்றிரவு பெரம்பூர் தொடர்வண்டி நிலைய ஆட்டோ நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது பக்கத்திலிருந்த நடைமேடையில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் அங்கு சென்று பார்த்தபோது பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தகவல் அளித்து குழந்தையை ஒப்படைத்துள்ளார்.

மேலும் இந்நிகழ்வு தொடர்பாக ஓட்டேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஐந்து மாத பெண் குழந்தையை வீசிச் சென்றது யார் என்பது பற்றி தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆம்பூரில் லாட்டரி விற்றவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

Intro:Body:5 மாத பெண் குழந்தையை ரோட்டில் வீசி சென்ற நபருக்கு போலீசார் வலைவீச்சு.

சென்னை ஓட்டேரி மங்கலபுரம் பகுதியை சேர்ந்தவர் டார்வின் ராஜ்(48).இவர் ஆட்டோ ஓட்டி வருகின்றார். இந்த நிலையில் இவர் நேற்று இரவு பி.எச் ரோடு பெரம்பூர் ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்துள்ளார்.அப்போது பக்கத்தில் இருந்த பிளாட்பாரத்தில் குழந்தை அழுகை சத்தம் கேட்டுள்ளது.இதனை தொடர்ந்து அங்கு சென்று பார்க்கும்போது பிறந்து சுமார் 5 மாதம் ஆன பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தகவல் அளித்து குழந்தையை ஒப்படைத்து உள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குபதிவு செய்து 5மாத பெண் குழந்தையை தூக்கி சென்றது யார் என்பதை பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.Conclusion:
Last Updated : Feb 1, 2020, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.