ETV Bharat / jagte-raho

கொள்ளிடம் ஆற்றில் மிதந்த உடல் - காவல்துறை விசாரணை!

author img

By

Published : Oct 11, 2020, 4:34 PM IST

அரியலூர் மாவட்ட கொள்ளிடம் ஆற்றில் உயிரிழந்த நிலையில் மிதந்து கிடந்த ஆணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆற்றில் மிதந்த உடல்
ஆற்றில் மிதந்த உடல்

அரியலூர்: தண்ணீரில் ஊறிப்போய் கொள்ளிடம் ஆற்றில் மிதந்த உடலை கண்ட ஆடு, மாடு மேய்ப்பவர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர்.

ஜெயங்கொண்டம் அருள்மொழி கிராமத்திற்கு அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

ஆற்றில் மிதந்த உடல்

இதனை அப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்க வருபவர்கள் பார்த்துவிட்டு தா.பழூர், விக்கிரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த உடல் இரண்டு நாட்களுக்கு மேலாக தண்ணீரில் ஊறி இருப்பதால், யார் என அடையாளம் காண முடியவில்லை. மேலும் உயிரிழந்தவரின் கழுத்தில் கயிறு இருக்கிய நிலையில் உடல், முகங்கள் சிதைந்து காணப்பட்டதால் அடையாளம் காண இயலவில்லை.

இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் டிஎஸ்பி தேவராஜ் தலைமையில் இது கொலையா? அல்லது தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: போலி ஃபேஸ்புக் பக்கம்; டிஎஸ்பி-க்கே இந்த நிலைமையா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.