ETV Bharat / international

South Korea: தென் கொரியாவை புரட்டிப் போட்ட வெள்ளம் - 22 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Jul 16, 2023, 10:33 AM IST

தென் கொரியாவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்ததாகவும், 14 பேர் மாயம் ஆகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Heavy rain, flooding leave 22 dead, 14 missing in South Korea
தென் கொரியாவை புரட்டிப் போட்ட மழை, வெள்ளம் - 22 பேர் உயிரிழப்பு ; 14 பேர் மாயம்!

சியோல்: தென் கொரியா நாட்டில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து உள்ள நிலையில், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி 22 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், 14 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, ஓசோங் நகரத்தில் வெள்ளம் சூழ்ந்த சாலையில் சிக்கி 19 வாகனங்கள் நீரில் மூழ்கி உள்ளதாகவும், அதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதைக் கண்டறிய அதிகாரிகள் முயல்வதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வடக்கு கியோங்சாங் மாகாணத்தில் அதிக அளவில் இறப்புகள் பதிவாகி உள்ளன. அங்கு பெரும்பாலான பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீடுகள் இடிந்து விழுந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர். அதைத் தொடர்ந்து தெற்கு சுங்சியோங் மாகாணத்தில் 4 இறப்புகள் பதிவாகி உள்ளதாக மத்திய பேரிடர் மற்றும் பாதுகாப்பு எதிர் நடவடிக்கை தலைமையகம் தெரிவித்துள்ளது.

தெற்கு சுங்சியோங் மாகாணத்தின் நோன்சான் பகுதியில் கடந்த ஜூலை 14ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவினால் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்து உள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, செஜாங் மாகாணத்தில் ஏற்பட்ட மண் சரிவில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். தென்கிழக்கு மாவட்டமான யோங்ஜு மற்றும் மத்திய மாகாணமான சியோங்யாங்கில் வீடுகள் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்து உள்ளனர்.

ஒசோங் பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சாலை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. வெள்ளம் சூழ்ந்த சாலையில் 19 வாகனங்கள் சிக்கிக் கொண்டதாகவும், அதில் இருந்தவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ள அதிகாரிகள், சிக்கி உள்ளவர்களின் சரியான எண்ணிக்கையை வெளியிடவில்லை.

தென் கொரியா முழுவதும் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், கோசன் அணை நிரம்பத் தொடங்கி உள்ளது. இதனையடுத்து, கோசன் நகர்ப்பகுதியில் வசிக்கும் 6,400 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். ஜூலை 15ஆம் தேதி மாலை நிலவரப்படி நாடு, மொத்தம் 4,763 பேர் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மின் வசதி முடங்கி உள்ள நிலையில், தற்போது படிப்படியாக, மின்சார வசதி வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இருப்பினும், வடக்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள Mungyeong, Yeongju மற்றும் Yecheon ஆகிய இடங்களில் உள்ள 8,300 வீடுகளுக்கு இன்னும் மின்சார வசதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெள்ளம் காரணமாக, 139 சாலைகள் மூடப்பட்டுள்ளன. 19 தேசிய பூங்காக்களில் 384 பாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: UP Kanwar Yatra: கன்வார் யாத்திரை சென்ற வாகனத்தின் மீது மின்சாரம் பாய்ந்து 5 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.