ETV Bharat / international

ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதி நிகழ்விற்கு எதிர்ப்பு கிளம்பியது ஏன்?

author img

By

Published : Sep 27, 2022, 12:37 PM IST

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி நிகழ்விற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கான முழு காரணம் குறித்து காணலாம்.

ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதி நிகழ்விற்கு எதிர்ப்பு கிளம்பியது ஏன்?
ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதி நிகழ்விற்கு எதிர்ப்பு கிளம்பியது ஏன்?

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8 ஆம் தேதி நரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் சார்பில் ஜூலை 12 ஆம் தேதி இறுதிச்சடங்கு நடைபெற்றது.

இந்நிலையில் முழு அரசு மரியாதையுடன் நினைவு நிகழ்ச்சி இன்று (செப் 27) நடைபெறுகிறது. இதற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, ஜவை சந்தித்து பேசினார். இந்த இறுதி நிகழ்வில் 100 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதி நிகழ்விற்கு அரசியல் பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர் நீண்ட காலமாக ஜப்பானின் பிரதமராக பதவி வகித்தார். அப்போது, யூனிபிகேஷன் தேவலாயத்துடன் (Unification Church) நெருக்கமான உறவினை வைத்துக் கொண்டதுதான், இந்த எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக அறியப்படுகிறது.

இந்த தேவாலயத்திற்கு அடித்தளமிட்டது முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே என்பதும், இதற்காக அவர் தனது குடும்பத்தாருடன் ஊழலில் ஈடுபட்டார் என்பதும் குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. பொதுவாக இரண்டாம் உலகப் போருக்கு முன்பு நாட்டின் பிரதிநிதிகள் கடவுளுக்கு இணையாகக் கருதப்பட்டனர்.

ஆனால், போருக்குப் பின் நிலைமை தலைகீழாக மாறியது. மேலும், அரசு இறுதிச் சடங்குகளும் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் கடந்த 1967 ஆம் ஆண்டு ஷிகெரு யோஷிடா என்ற ஜப்பான் பிரதிநிதி, ஜப்பானில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து பிரான்சிஸ்கோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

எனவே இவருக்கு எந்தவித சட்ட அடிப்படையும் இன்றி அரசு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. மேலும் தற்போது அபேவின் இறுதி நிகழ்வும் ஒருதலைபட்சமான முடிவு என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

பல்வேறு பொருளாதார சிக்கல்களை ஜப்பான் சந்தித்து வரும் நிலையில், அபேவின் இறுதிச்சடங்கு நிகழ்விற்காக சுமார் 1.7 பில்லியன் யென் (இந்திய மதிப்பில் 96 கோடி ரூபாய்) செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களின் வரிப்பணம் வீண்டிக்கப்படுவதும் கண்டிக்கத்தக்கது என எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.

அபேவின் இறுதி அரசு நிகழ்வு டோக்கியோவில் உள்ள புடோகன் அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் ஜப்பான் விதித்துள்ளது. மேலும் இவ்வாறு அபேவிற்கு இறுதி மரியாதை நிகழ்த்துவதால், மீண்டும் யூனிபிகேஷன் தேவலாயத்துடன் இணக்கமான உறவை ஏற்படுத்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா முயற்சிக்கிறார் என்பதும் எதிர் வாதங்களாக வைக்கப்படுகிறது.

முன்னதாக டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 70 வயது முதியவர் தீ குளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜப்பான் பிரமதமருடன் மோடி சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.