ETV Bharat / international

எனக்கு எதிராக வெளிநாட்டு சதி.. கதறும் இம்ரான் கான்!!

author img

By

Published : Mar 28, 2022, 1:07 PM IST

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக ஊழல் புகார்கள் மற்றும் நிர்வாக சீர்கேடு எழுந்துள்ள நிலையில், தனக்கு எதிராக வெளிநாடுகள் சதி தீட்டம் தீட்டுகின்றன என இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கிடையில் அவரை பிரதமர் பதவியிலிருந்து இறக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன.

Imran Khan
Imran Khan

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக் கோரி பாகிஸ்தானில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெறுகின்றன. இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு எம்.பி.க்களும் வலியுறுத்திவருகின்றனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், அவரது அரசுக்க எதிராக நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

இந்நிலையில் இம்ரான் கான் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) இஸ்லாமாபாத்தில் மாபெரும் பேரணி ஒன்றில் உரையாற்றினார்.

அப்போது, “வெளிநாட்டு சக்திகள், உள்நாட்டு அரசியல்வாதிகளை பயன்படுத்துகின்றன” என்றார். மேலும், “வெளியுறவு கொள்கையை நிர்ணயிப்பதில் பணம் ஒரு ஆயுதமாக இருப்பதாக கூறிய இம்ரான் கான், வெளியுறவுக் கொள்கையை சீர் செய்ய போவதாகவும் கூறினார்.

இது குறித்து மேலும் இம்ரான் கான், “என்ன நடந்தாலும், எது வந்தாலும், எது போனாலும்.. ஏன் என் உயிரே போனாலும் நான் அவர்களை மன்னிக்க மாட்டேன்” என்றார்.

இம்ரான் கானின் ஆட்சியை கவிழ்க்க மொத்தமுள்ள 342 உறுப்பினர்களில் 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த ஆதரவு தங்களுக்கு உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.

இந்த நிலையில் இம்ரான் கான் (69) பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் ஆளுங்கட்சிக்கு கூட்டணி கட்சி எம்.பி.க்கள் உள்பட 155 பேரின் ஆதரவு மட்டுமே இருப்பதாக தெரியவருகிறது.

இதையும் படிங்க : இம்ரான் கான் ஐநாவில் காஷ்மீர் குறித்து என்ன பேசினார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.