ETV Bharat / international

மூவர்ணக் கொடி போர்த்திய ஆல்ப்ஸ் மலை!

author img

By

Published : Apr 18, 2020, 11:04 PM IST

பெர்ன்: இந்தியாவின் மூவர்ணக் கொடி மேட்டர்ஹான் சிகரத்தின் மீது ஒளிரவிடப்பட்டது.

alps, ஆல்ப்ஸ் மலை மூர்வணக் கொடி
alps tricolor flag

இதுகுறித்து ட்வீட் செய்திருந்த சுவிட்சர்லாந்தில் இருக்கும் இந்தியத் தூதரகம், "கரோனாவை எதிர்த்துப் போராடி வரும் இந்தியர்களுடன் சுவிட்சர்லாந்து தோளோடு தோள் நிற்பதை உணர்த்தும் விதமாக, மேட்டர்ஹாம் சிகரத்தின் மீது பிரமாண்டமான (1000 மீட்டர்) இந்திய மூவர்ணக் கொடி ஒளிரவிடப்பட்டது" எனக் கூறியுள்ளது.

  • INDIAN TRICOLOR ON THE MATTERHORN MOUNTAIN: Indian Tricolor of more than 1000 meters in size projected on Matterhorn Mountain, Zermatt, Switzerland to express Solidarity to all Indians in the fight against COVID 19. A big Thank You to @zermatt_tourism for the gesture. @MEAIndia pic.twitter.com/y4diNDSlT9

    — India in Switzerland, The Holy See & Liechtenstein (@IndiainSwiss) April 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தப் பதிவில் மூவர்ணக் கொடி போர்த்திய மேட்டர்ஹான் சிகரத்தின் படத்தையும் சுவிட்சர்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் இணைத்துள்ளது. இப்பதிவை ட்வீட் செய்த பிரதமர் நரேந்திர மோடி, "கோவிட்-19 நோயை இந்த உலகமே ஒற்றுமையுடன் எதிர்த்து வருகிறது. இந்த பெருந்தொற்றை மானிடம் வென்றுவிடும்" எனக் கூறியுள்ளார்.

இந்தியாவில் இதுவரை 12 ஆயிரத்து 289 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 488 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க : ரமலான் மாதத்தில் மசூதிகள் திறந்திருக்கும்: பாகிஸ்தான் திட்டவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.