ETV Bharat / international

இந்தியாவின் கோவிட்-19 நிலவரம் கவலையளிக்கிறது - உலக சுகாதார அமைப்பு!

author img

By

Published : May 15, 2021, 7:28 AM IST

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

WHO Chief
WHO Chief

இந்தியாவில் நிலவும் கோவிட்-19 இரண்டாம் அலை பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், "இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன; உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இது கவலைக்குரிய அம்சமாகும்" என்றார்.

தொடர்ந்து அவர், "இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய சர்வதேச சமூகத்திற்கு நன்றி. இந்தியா போன்ற ஆசிய நாடுகள் மட்டுமல்ல, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகள், ஆப்ரிக்க நாடுகளிலும் தொற்றின் தீவிரம் தொடர்ந்து உள்ளது.

கடந்த வாரத்தில் கோவிட்-19 தொடர்பான 40 விழுக்காடு உயிரிழப்புகள் அமெரிக்க கண்டத்தில் பதிவாகியுள்ளது. இதுவரை கோவிட்-19 காரணமாக 33 லட்சம் உயிர்கள் பலியாகியுள்ளன. பாதிப்பின் முதல் ஆண்டை விட இந்தாண்டு அதன் தீவிரம் அதிகமாக இருக்கும்" என எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: தடுப்பூசி போட்டுக்கொண்டால் முகக்கவசம் தேவையில்லை - பைடன் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.