ETV Bharat / international

இந்தோனேஷியா சுனாமி எச்சரிக்கை வாபஸ்

author img

By

Published : Dec 14, 2021, 8:46 PM IST

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
earthquake hits Indonesia
earthquake hits Indonesia

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் கிழக்கே உள்ள நுசா தெங்கரா மாகாணத்தில் இன்று 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. இதன்காரணமாக இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் மொவ்மேர் நகரத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக 18.5 கி.மீ. ஆழத்தில் ப்ளோரஸ் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை குறிப்பிடத்தக்க சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. லாரன்டுகாவின் சில பகுதிகளில் மட்டும் உணரப்பட்டதாக, அலுவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பத்து நாட்களுக்கு முன்பு, இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள செமரு மலையில் ஏற்பட்ட பயங்கர எரிமலை வெடிப்பில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்தோனேசியாவில் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தோனேசியா சிறையில் பயங்கர தீ- 41 கைதிகள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.