ETV Bharat / international

கோவிட்-19 நிலவரம்: உலகளவில் 8.68 கோடி பேருக்கு பாதிப்பு

author img

By

Published : Jan 6, 2021, 3:40 PM IST

கடந்த 24 மணி நேரத்தில் ஏழு லட்சத்து 50 ஆயிரத்து 555 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 757 பேர் உயிரிழந்தனர்.

COVID-19 tracker
COVID-19 tracker

சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.

தற்போதைய பாதிப்பு நிலவரம்

இதுவரை எட்டு கோடியே 68 லட்சத்து 96 ஆயிரத்து 534 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 லட்சத்து 77 ஆயிரத்து 316ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆறு கோடியே 11 லட்சத்து 05 ஆயிரத்து 194ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஏழு லட்சத்து 50 ஆயிரத்து 555 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 757 பேர் உயிரிழந்தனர்.

சர்வதேச நாடுகளின் நிலவரம்

உலக அளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. அங்கு நாள்தோறும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பாதிப்பு பதிவாகிறது. இதுவரை அந்நாட்டில் இரண்டு கோடியே 15 லட்சத்து 79 ஆயிரத்து 641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 65 ஆயிரத்து 664 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பாதிப்புகளை தற்போது சந்தித்துவருகின்றன.

அமெரிக்காவில் தற்போது தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 10 பேருக்கு தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக அந்நாட்டின் முன்னணி பெருந்தொற்று நிபுணர் ஆண்டனி ஃபாச்சி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனாவை கண்டுகொள்ளாத சோமாலியா: அச்சத்தில் நிபுணர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.