ETV Bharat / entertainment

25 ஆண்டை நிறைவு செய்யும் ‘துள்ளாத மனமும் துள்ளும்’.. எஸ்.எழில் கொண்டாட்ட விழாவிற்கு விஜய் வருகிறாரா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 4:02 PM IST

Director S.Ezhil: நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மூலம் இயக்குநராக எஸ்.எழில் அறிமுகமானார். தற்போது வரும் 29ஆம் தேதி துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதால், அதனை கொண்டாடும் வகையில் விழா ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் இயக்குநர் எஸ்.எழில்

சென்னை: நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், எஸ்.எழில். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்கக் கூடிய படங்களாக இயக்கி வருகிறார், இயக்குநர் எழில்.

கடந்த 2013-இல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்குராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது. 10 வருடங்கள் கழித்து தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்குராஜா 2 படத்தை இயக்கி வருகிறார். அத்தோடு, இயக்குநர் எஸ்.எழில், திரையுலகில் இந்த வருடம் தனது 25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார். அவரது இயக்கத்தில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படமும் வெளியாகி, வருகிற ஜன.29ஆம் தேதியில் 25வது வருடத்தை தொட இருக்கிறது.

இதைத் தொடர்ந்து, தனது 25 வருட பயணத்தைக் கொண்டாடும் விதமாக துள்ளத மனம் துள்ளும் படத்தின் 25 வருட கொண்டாட்டத்தையும், தேசிங்குராஜா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டையும் ஜன.29ஆம் தேதி மாலை 6 மணிக்கு வடபழனி கிரீன்பார்க் ஹோட்டலில் விழாவாக நடத்த, இதன் தயாரிப்பாளர் இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் பி.ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்ட இயக்குநர் எஸ்.எழில், "வரும் ஜன.29 உடன் 'துள்ளாத மனம் துள்ளும்' படம் மட்டுமல்ல, நானும் திரையுலகில் நுழைந்து 25 வருடம் ஆகிறது. அன்றைய தினம் இந்த கொண்டாட்டத்துடன் தேசிங்குராஜா 2 ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட இருக்கிறோம். அந்த நிகழ்வில் இதுவரை நான் பணியாற்றிய படங்களின் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என்னுடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள் அனைவரையும் அழைக்க இருக்கின்றோம்.

இன்னும் வெளியாகாமல் இருக்கும் எனது இரண்டு படங்களையும் சேர்த்து, தேசிங்குராஜா 2 எனது 15வது படம். வேறு மொழிக்கு செல்லும் எண்ணம் இதுவரை இல்லை. ஆரம்பத்தில் தெலுங்கில் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. அது பெரிதாக கைகூடவில்லை.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் கிளைமாக்ஸ் எப்போதுமே எனக்கு ஆச்சரியம்தான். பல திரையரங்குகளில் இந்த கிளைமாக்ஸ் காட்சிக்கு ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். எனது இரண்டாவது படமான பெண்ணின் மனதை தொட்டு படத்தின் கதை விவாதத்திற்காக ஏற்காடு சென்றிருந்தேன். அப்போது, சேலத்தில் துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் 85வது நாள் காட்சியை பார்க்கச் சென்றிருந்தோம். அப்போதும் கூட ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்தது ஆச்சரியமாக இருந்தது.

சார்லி சாப்ளின் நடித்த சிட்டி லைட்ஸ் படத்திலிருந்துதான் எனக்கு துள்ளாத மனமும் துள்ளும் படத்தை உருவாக்குவதற்கான ஒரு பொறி கிடைத்தது. முதலில் வடிவேலுவை வைத்து கமர்சியல் அம்சங்கள் இல்லாமல் உருவாக்கத்தான் திட்டமிட்டு இருந்தோம். அந்த கதை கேட்டு, வடிவேலு ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு இரண்டு மூன்று தயாரிப்பாளர்களிடம் கூட என்னை அனுப்பினார். ஆனால் எதுவும் கைகூடவில்லை. அதன் பிறகு நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நடிகர் ஜெயம்ரவியின் தீபாவளி படத்திற்குப் பிறகு, எனக்கு ஒரு இடைவெளி விழுந்தது. அதன்பிறகு வந்து பார்த்த போது சினிமாவே மாறி இருந்தது. குறிப்பாக, 2004க்கு பிறகு சினிமா டிஜிட்டலுக்கு மாறியது. பல புதிய இயக்குநர்களின் வருகை அதிகரித்தது. ஜெயம் ரவியே எனது படத்திற்கு சம்மதம் தெரிவித்த சமயத்தில், அவர் மூன்று படங்களில் நடிக்கும் அளவிற்கு பிஸியாக இருந்தார். ஆனால், நல்ல படங்கள் வந்தால் மக்கள் அதை கொண்டாடத் தயாராக இருந்தார்கள்.

அந்த சமயத்தில் மனம் கொத்தி பறவை படத்தை காமெடியாக உருவாக்கியிருந்தேன். அந்த படம் எல்லோருக்கும் பிடித்துவிட, அதைத் தொடர்ந்து அனைவருமே காமெடி படங்களை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படி உருவானதுதான் தேசிங்குராஜா. ஒரு கதையை உருவாக்க எப்போதும் ஆறு மாதம் நேரம் எடுத்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் யாரையும் நான் தேடிப் போவதில்லை. அந்த மாதிரிதான் சிவகார்த்திகேயனையும் நான் மீண்டும் தேடிச் செல்லவில்லை. காரணம், இந்த ஹீரோவுக்குத்தான் என நினைத்து கதை எழுதுவது இல்லை. எழுதி முடித்தபின், அதற்கு யார் பொருத்தமோ அந்த ஹீரோவைத்தான் தேடிப் போகிறேன்.

தேசிங்குராஜா படத்திற்கும், இந்த இரண்டாம் பாகத்திற்கும் ஓரளவு கதையில் சில சாயல்கள் ஒன்றாக இருந்தாலும், இதன் திரைக்கதை முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். முதல் பாகத்தில் நடித்த சூரி இப்போது ஹீரோவாகி விட்டதால், அவரை அழைப்பது சாத்தியப்படாது.

இந்த படத்தில் ஜனா, புகழ், ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் என பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கின்றது. கதாநாயகிகளாக பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா நடிக்கிறார்கள்.

அஜித் நடித்த "பூவெல்லாம் உன் வாசம்" படத்திற்குப் பிறகு இசையமைப்பாளர் வித்யாசாகருடன் இதில் இணைகிறேன். பல சாதனைகளைக் கடந்தவர். படப்பிடிப்பு நடந்து வருகிறது. சென்னை மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது.

சினிமாவில் இப்போது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. அதற்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள வேண்டும். அதே சமயம், சிறிய பட்ஜெட் படங்களில் பெரிய மாற்றங்களை செய்ய முடியாது. பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டுமே அது சாத்தியம். சமீபத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகரைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, "என்ன ஆச்சு உங்களுக்கு? எதற்காக இப்படி ட்ரெண்ட் மாறி வித்தியாசமாக பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொள்கிறீகள்" என கேட்டார்.

வித்தியாசமான பாடல்கள் எனது படங்களில் இருந்தாலும், என்னைப் பொருத்தவரை மெலோடி பாடல்களை எப்போது கொடுத்தாலும், ரசிகர்கள் கேட்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் வருவதை விட, சுயாதீன இசையமைப்பாளர்கள்தான் மெலோடி பாடல்களை அதிகம் கொடுக்கிறார்கள். அதை இன்றைய இளைஞர்கள் ரசித்து கேட்கிறார்கள். மேலும், எனது இயக்கத்தில் விஷ்ணு விஷாலின் 'ஜகஜால கில்லாடி' ஜிவி பிரகாஷின் 'ஆயிரம் ஜென்மங்கள்' என இரண்டு படங்களும் அடுத்தடுத்து வரும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மன்சூர் அலிகானுக்கு அபராதம் செலுத்த மேலும் 10 நாட்கள் அவகாசம்!

25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் இயக்குநர் எஸ்.எழில்

சென்னை: நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், எஸ்.எழில். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்கக் கூடிய படங்களாக இயக்கி வருகிறார், இயக்குநர் எழில்.

கடந்த 2013-இல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்குராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது. 10 வருடங்கள் கழித்து தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்குராஜா 2 படத்தை இயக்கி வருகிறார். அத்தோடு, இயக்குநர் எஸ்.எழில், திரையுலகில் இந்த வருடம் தனது 25வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார். அவரது இயக்கத்தில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படமும் வெளியாகி, வருகிற ஜன.29ஆம் தேதியில் 25வது வருடத்தை தொட இருக்கிறது.

இதைத் தொடர்ந்து, தனது 25 வருட பயணத்தைக் கொண்டாடும் விதமாக துள்ளத மனம் துள்ளும் படத்தின் 25 வருட கொண்டாட்டத்தையும், தேசிங்குராஜா 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டையும் ஜன.29ஆம் தேதி மாலை 6 மணிக்கு வடபழனி கிரீன்பார்க் ஹோட்டலில் விழாவாக நடத்த, இதன் தயாரிப்பாளர் இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் பி.ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்ட இயக்குநர் எஸ்.எழில், "வரும் ஜன.29 உடன் 'துள்ளாத மனம் துள்ளும்' படம் மட்டுமல்ல, நானும் திரையுலகில் நுழைந்து 25 வருடம் ஆகிறது. அன்றைய தினம் இந்த கொண்டாட்டத்துடன் தேசிங்குராஜா 2 ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட இருக்கிறோம். அந்த நிகழ்வில் இதுவரை நான் பணியாற்றிய படங்களின் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் என்னுடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள் அனைவரையும் அழைக்க இருக்கின்றோம்.

இன்னும் வெளியாகாமல் இருக்கும் எனது இரண்டு படங்களையும் சேர்த்து, தேசிங்குராஜா 2 எனது 15வது படம். வேறு மொழிக்கு செல்லும் எண்ணம் இதுவரை இல்லை. ஆரம்பத்தில் தெலுங்கில் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. அது பெரிதாக கைகூடவில்லை.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் கிளைமாக்ஸ் எப்போதுமே எனக்கு ஆச்சரியம்தான். பல திரையரங்குகளில் இந்த கிளைமாக்ஸ் காட்சிக்கு ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். எனது இரண்டாவது படமான பெண்ணின் மனதை தொட்டு படத்தின் கதை விவாதத்திற்காக ஏற்காடு சென்றிருந்தேன். அப்போது, சேலத்தில் துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் 85வது நாள் காட்சியை பார்க்கச் சென்றிருந்தோம். அப்போதும் கூட ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்தது ஆச்சரியமாக இருந்தது.

சார்லி சாப்ளின் நடித்த சிட்டி லைட்ஸ் படத்திலிருந்துதான் எனக்கு துள்ளாத மனமும் துள்ளும் படத்தை உருவாக்குவதற்கான ஒரு பொறி கிடைத்தது. முதலில் வடிவேலுவை வைத்து கமர்சியல் அம்சங்கள் இல்லாமல் உருவாக்கத்தான் திட்டமிட்டு இருந்தோம். அந்த கதை கேட்டு, வடிவேலு ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு இரண்டு மூன்று தயாரிப்பாளர்களிடம் கூட என்னை அனுப்பினார். ஆனால் எதுவும் கைகூடவில்லை. அதன் பிறகு நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நடிகர் ஜெயம்ரவியின் தீபாவளி படத்திற்குப் பிறகு, எனக்கு ஒரு இடைவெளி விழுந்தது. அதன்பிறகு வந்து பார்த்த போது சினிமாவே மாறி இருந்தது. குறிப்பாக, 2004க்கு பிறகு சினிமா டிஜிட்டலுக்கு மாறியது. பல புதிய இயக்குநர்களின் வருகை அதிகரித்தது. ஜெயம் ரவியே எனது படத்திற்கு சம்மதம் தெரிவித்த சமயத்தில், அவர் மூன்று படங்களில் நடிக்கும் அளவிற்கு பிஸியாக இருந்தார். ஆனால், நல்ல படங்கள் வந்தால் மக்கள் அதை கொண்டாடத் தயாராக இருந்தார்கள்.

அந்த சமயத்தில் மனம் கொத்தி பறவை படத்தை காமெடியாக உருவாக்கியிருந்தேன். அந்த படம் எல்லோருக்கும் பிடித்துவிட, அதைத் தொடர்ந்து அனைவருமே காமெடி படங்களை கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படி உருவானதுதான் தேசிங்குராஜா. ஒரு கதையை உருவாக்க எப்போதும் ஆறு மாதம் நேரம் எடுத்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் யாரையும் நான் தேடிப் போவதில்லை. அந்த மாதிரிதான் சிவகார்த்திகேயனையும் நான் மீண்டும் தேடிச் செல்லவில்லை. காரணம், இந்த ஹீரோவுக்குத்தான் என நினைத்து கதை எழுதுவது இல்லை. எழுதி முடித்தபின், அதற்கு யார் பொருத்தமோ அந்த ஹீரோவைத்தான் தேடிப் போகிறேன்.

தேசிங்குராஜா படத்திற்கும், இந்த இரண்டாம் பாகத்திற்கும் ஓரளவு கதையில் சில சாயல்கள் ஒன்றாக இருந்தாலும், இதன் திரைக்கதை முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். முதல் பாகத்தில் நடித்த சூரி இப்போது ஹீரோவாகி விட்டதால், அவரை அழைப்பது சாத்தியப்படாது.

இந்த படத்தில் ஜனா, புகழ், ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் என பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கின்றது. கதாநாயகிகளாக பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா நடிக்கிறார்கள்.

அஜித் நடித்த "பூவெல்லாம் உன் வாசம்" படத்திற்குப் பிறகு இசையமைப்பாளர் வித்யாசாகருடன் இதில் இணைகிறேன். பல சாதனைகளைக் கடந்தவர். படப்பிடிப்பு நடந்து வருகிறது. சென்னை மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது.

சினிமாவில் இப்போது நிறைய மாற்றங்கள் வந்துவிட்டன. அதற்கு ஏற்ப நாம் மாறிக்கொள்ள வேண்டும். அதே சமயம், சிறிய பட்ஜெட் படங்களில் பெரிய மாற்றங்களை செய்ய முடியாது. பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டுமே அது சாத்தியம். சமீபத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகரைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது, "என்ன ஆச்சு உங்களுக்கு? எதற்காக இப்படி ட்ரெண்ட் மாறி வித்தியாசமாக பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொள்கிறீகள்" என கேட்டார்.

வித்தியாசமான பாடல்கள் எனது படங்களில் இருந்தாலும், என்னைப் பொருத்தவரை மெலோடி பாடல்களை எப்போது கொடுத்தாலும், ரசிகர்கள் கேட்கத் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் வருவதை விட, சுயாதீன இசையமைப்பாளர்கள்தான் மெலோடி பாடல்களை அதிகம் கொடுக்கிறார்கள். அதை இன்றைய இளைஞர்கள் ரசித்து கேட்கிறார்கள். மேலும், எனது இயக்கத்தில் விஷ்ணு விஷாலின் 'ஜகஜால கில்லாடி' ஜிவி பிரகாஷின் 'ஆயிரம் ஜென்மங்கள்' என இரண்டு படங்களும் அடுத்தடுத்து வரும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மன்சூர் அலிகானுக்கு அபராதம் செலுத்த மேலும் 10 நாட்கள் அவகாசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.