ETV Bharat / entertainment

மாரி செல்வராஜின் மூன்றாவது நூல் - நடிகர் வடிவேலு வெளியிட்டார்!

author img

By

Published : Apr 18, 2022, 5:37 PM IST

இயக்குநர் மாரி செல்வராஜின் மூன்றாவது கவிதைத்தொகுப்பை நடிகர் வடிவேலு வெளியிட்டார்.

மாரி செல்வராஜின் மூன்றாவது நூல் -  நடிகர் வடிவேலு வெளியிட்டார்!
மாரி செல்வராஜின் மூன்றாவது நூல் - நடிகர் வடிவேலு வெளியிட்டார்!

சென்னை: பரியேறும்பெருமாள், கர்ணன் போன்ற மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர், இயக்குநர் மாரி செல்வராஜ். இவர் தற்போது, 'மாமன்னன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நூல்கள் ஆகும். இதைத்தொடர்ந்து மூன்றாவது நூலாக 'உச்சினியென்பது' என்ற அவரது முதல் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக இந்த தொகுப்பு வந்திருக்கிறது. இந்த நூலை 'மாமன்னன்' படத்தில் நடித்து வரும் நடிகர் வடிவேலு சமீபத்தில் வெளியிட்டார்.

இதையும் படிங்க:ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.