ETV Bharat / entertainment

'விக்ரம்' பட வெற்றியைத் தொடர்ந்து ராமேஸ்வரம் சென்று வந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

author img

By

Published : Jun 7, 2022, 4:04 PM IST

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் எழுத்தாளரும் லோகேஷ் கனகராஜின் நண்பருமான ரத்னகுமார் ஆகியோர், தங்களது வெற்றிப் படங்களுக்கு பிறகு ராமேஸ்வரம் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

”விக்ரம்” பட வெற்றியை தொடர்ந்து ராமேஷ்வரம் சென்று வந்த இயக்குநர் லோகேஷ்
”விக்ரம்” பட வெற்றியை தொடர்ந்து ராமேஷ்வரம் சென்று வந்த இயக்குநர் லோகேஷ்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் வசூலைக் குவித்து வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் எழுத்தாளரும் லோகேஷ் கனகராஜின் நண்பருமான ரத்னகுமார் ஆகியோர் தங்களது வெற்றிப் படங்களுக்கு பிறகு, ராமேஸ்வரம் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 'விக்ரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் சென்று சுவாமி தரிசனம் செய்து உள்ளனர்.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கைதி 2019 மற்றும் விக்ரம் 2022 பிளாக்பஸ்டர் சம்பவம், எனும் கேப்ஷனுடன் பதிவிட்டுள்ள ரத்னகுமார், ’கைதி டிஸ்கஷன் தொடங்கி, மாஸ்டர் மற்றும் தற்போது விக்ரம் படங்களில் எழுத்தாளனாக உன்னுடன் பணிபுரியும் ஒவ்வொரு தருணத்தையும் விரும்பினேன். இந்த வெற்றிப்பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துகள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

கைதி மற்றும் விக்ரம் வெற்றிக்கு பிறகு ராமேஷ்வரத்தில் லோகெஷ் மற்றும் ரத்னகுமர்
கைதி மற்றும் விக்ரம் வெற்றிக்குப் பிறகு, ராமேஸ்வரத்தில் லோகேஷ் மற்றும் ரத்னகுமார்

இதையும் படிங்க: 'உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை' - லோகேஷ் கனகராஜுக்கு கமல் எழுதியுள்ள கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.