ETV Bharat / entertainment

நித்தம் ஒரு வானம் நிச்சயம் நல்ல உணர்வைத் தரக்கூடிய படமாக இருக்கும்

author img

By

Published : Sep 24, 2022, 8:36 PM IST

திரையரங்குகளுக்கு படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் படம் முடித்து வெளியேறும் போது புத்துணர்ச்சியோடும் புன்னகையோடும் வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் 'நித்தம் ஒரு வானத்தை உருவாக்கியுள்ளோம் என்று இயக்குனர் ர.கார்த்திக் தெரிவித்துள்ளார்.

அசோக்செல்வன்-அபர்ணா பாலமுரளி நடிப்பில் 'நித்தம் ஒரு வானம்'
அசோக்செல்வன்-அபர்ணா பாலமுரளி நடிப்பில் 'நித்தம் ஒரு வானம்'

சென்னை: நடிகர் அசோக்செல்வனின் அடுத்த படமான 'நித்தம் ஒரு வானம்' விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை ரைஸ் ஈஸ்ட் ஸ்ரீநிதி சாகர், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படம் குறித்து இயக்குநர் ர.கார்த்திக் பேசுகையில், "நம்முடைய தமிழ் சினிமாவை பொறுத்தவரை இது போன்ற பயணம் தொடர்பான படங்கள் அரிதாகதான் வரும். 'நித்தம் ஒரு வானம்' நிச்சயம் நல்ல உணர்வைத் தரக்கூடிய படமாக இருக்கும். மூன்று வித்தியாசமான நிலபரப்பில் மூன்று வித்தியாசமான உணர்வுகளை இதில் கொடுத்திருக்கிறோம். இந்தப் படத்தில் நிறைய கதாநாயகிகள் இருந்தாலும், இது ஒரு காதல் கதை போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும் இதை எல்லாம் தாண்டி நம் வாழ்வின் தருணங்களை கொண்டாடும் வகையில் இருக்கும்.

நடிகர் அசோக்செல்வன் தன்னுடைய சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் கதாநாயகிகளான ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜ்சேகர் மூவருக்கும் சமமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மூவரும் அதை சிறப்பாக செய்துள்ளனர். இவர்களது கதாபாத்திரம் அனைத்து வயதில் உள்ள பெண்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.

நிறைய பாசிட்டிவான விஷயங்களை படத்தில் சேர்த்துள்ளோம். எப்போதெல்லாம் நாம் சோர்வாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்கிறோமோ அப்போது பயணம் செல்வது நம்முடைய எண்ணங்களை நேர்மறையாக்கும். கரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டுச் சுவருக்குள் அடைந்து கிடக்கும் நமக்கு ஃபீல் குட் படங்கள் பெரும் உறுதுணையாக அமைந்திருக்கிறது. திரையரங்குகளுக்கு படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் படம் முடித்து வெளியேறும் போது புத்துணர்ச்சியோடும் புன்னகையோடும் வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் நித்தம் ஒரு வானத்தை உருவாக்கியுள்ளோம்"

இந்த படம் சென்னை, சண்டிகர், மணாலி, கோபிச் செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்க்கு கோபி சுந்தர் இசையமைக்க, ஒளிப்பதிவு விது அய்யனா செய்ய, படத்தொகுப்பு ஆண்டனி அமைக்க மேலும் 'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் விரைவில் வெளியாகும் என படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:’ரெண்டு ராஜா’; வெளியானது நானே வருவேன் இரண்டாவது பாடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.