ETV Bharat / crime

சென்னையில் 220 கிலோ கஞ்சா பறிமுதல் - இரண்டு பேர் கைது!

author img

By

Published : Feb 24, 2021, 6:26 AM IST

சென்னை: காரில் 220 கிலோ கஞ்சா கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Two people were arrested
இரண்டு பேர் கைது

சென்னையில் போதை தடுப்பு நடவடிக்கை மூலம் கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுருந்தார்.

அதன் பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக, தோமையர்மலை அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் ராஜலஷ்மி, எம்ஜிஆர் நகர் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (பிப்.23) நெசப்பாக்கம் அருகே காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் வந்த இரண்டு நபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். காரில் சோதனை செய்தபோது அதில் 220 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

பின்னர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து கார், இரண்டு செல்போன்கள், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை செய்து பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பணம் வேணும்னா ஊருக்கு வா' சாப்பிட்டு விட்டு டிமிக்கி கொடுத்த பாஜகவினர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.