ETV Bharat / crime

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை!

author img

By

Published : Oct 28, 2022, 5:14 PM IST

மடிப்பாக்கத்தில் வீடு புகுந்து தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு 13 சவரன் நகைகள், 80 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்துச்சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்ணை கட்டிப்போட்டு நகை பணம் கொள்ளை
பெண்ணை கட்டிப்போட்டு நகை பணம் கொள்ளை

சென்னை: மடிப்பாக்கம் சதாசிவம் நகர் 2ஆவது லிங்க் சாலையில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர், பத்மஜா(46). இவர் தனியாக வசித்து வந்த நிலையில், நேற்று மாலை சந்தேகத்திற்குரிய நபர்கள் இருவர் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தனர்.

சந்தேகத்திற்குரிய நபர்கள் இருவரும் கூர்மையான ஆயுதத்தைக்காட்டி பத்மஜாவை மிரட்டி, கட்டிப்போட்டு வாயில் துணி வைத்து அடைத்தனர். பின் வீட்டில் இருந்த நகை, பணம், அப்பெண் அணிந்திருந்த நகைகள் என சுமார் 13 சவரன் நகைகள், 80 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றைக்கொள்ளையடித்துச்சென்றனர்.

பட்டப்பகலில் தனியாக இருந்த பெண்ணிடம் வீடு புகுந்து ஆயுதத்தைக்காட்டி கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அடையாளம் தெரியாத நபர்களைத்தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவன் கடத்தல் வழக்கில் திருப்பம்; தேர்வுக்குப்பயந்து மாணவன் செய்த நாடகம் - திடுக்கிடும் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.