ETV Bharat / city

விருப்பமின்றி நடந்த திருமணம்: இரண்டே நாளில் தற்கொலை செய்த புதுப்பெண்

author img

By

Published : Nov 18, 2021, 7:11 PM IST

Updated : Nov 19, 2021, 3:23 PM IST

வேலூர்: விருப்பம் இன்றி திருமணம் நடைபெற்றதால் திருமணம் ஆன இரண்டே நாளில் மணப்பெண்  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

c
c

வேலூர் முத்து மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (21). இவர் மூன்றாம் ஆண்டு இளங்கலை நர்சிங் படித்து வந்தார். இவருக்கு நவம்பர் 15ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் சுமைதாங்கி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (27) என்பவருடன் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

புதுப்பெண் தற்கொலை

இந்நிலையில், நேற்று (நவ.17) பெண் வீட்டில் மறுவீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே, அன்று அதிகாலை கழிவறையில் புவனேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

c
தற்கொலையைக் கைவிடுக

இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு காவல்துறையினர் புவனேஸ்வரியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அவரின் இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருமணமாகி இரண்டு நாளே ஆன நிலையில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இந்த வழக்கினை வேலூர் கோட்டாட்சியர் விசாரணை செய்து வருகிறார்.

விருப்பம் இன்றி திருமணம்

விசாரணையில், புவனேஸ்வரி படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருந்துள்ளார். ஆனால் அவருடைய பெற்றோர், புவனேஸ்வரியின் விருப்பம் இன்றி திருமணம் நிச்சயித்து உள்ளனர்.

நிச்சயமான 5 மாத இடைவெளியில் மூன்று முறை மட்டுமே மணிகண்டனுடன் புவனேஸ்வரி பேசியுள்ளார். இது குறித்து முழு விசாரணைக்கு பிறகே மற்ற விவரங்கள் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: புதுமாப்பிள்ளை உயிரை குடித்த ஆன்லைன் ரம்மி!

Last Updated : Nov 19, 2021, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.