ETV Bharat / city

வேலூரில் சிக்கன் ஷவர்மா கடைகளில் அதிரடி சோதனை; 9 கடைகளுக்கு நோட்டீஸ்!

author img

By

Published : May 11, 2022, 5:15 PM IST

வேலூர் மாநகர் பகுதிகளில் உள்ள ஷவர்மா கடைகளில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், வேலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு 100 கிலோ அளவிலான உணவுப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

ரூ.2,000 அபராதம்
ரூ.2,000 அபராதம்

வேலூர் மாநகர் பகுதிகளில் ஷவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, 100 கிலோ வரை உணவு தயாரிப்புப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக சம்பந்தபட்ட 9 கடைகளுக்கு நோட்டீஸ் அளித்தும் 2 கடைகளுக்கு ரூ.2,000 அபராதமும் வசூல் செய்துள்ளனர்.

மாநகராட்சியில் ஷவர்மா கடைகளில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் இன்று (மே 11) மட்டும் சுமார் 6 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் சுகாதாரமற்ற முறையில் இருந்த இறைச்சி மற்றும் ஷவர்மா தயாரிப்புப் பொருட்கள் 10 கிலோ அளவிலான பொருட்கள் அழிக்கப்பட்டன. மேலும், காலாவதியான 10 கிலோ ஐஸ்கிரீம்களும் அழிக்கப்பட்டன.

மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சிக்கன் ஷவர்மா கடைகளில் அதிரடி சோதனை

இதுவரை மாவட்டத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட ஷவர்மா கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முறையான பராமரிப்பு மற்றும் சுகாதாரமற்ற முறையில் உள்ள 9 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், கெட்டுப்போன மற்றும் காலாவதியான 6 கிலோ ஷவர்மா சிக்கன் உட்பட 100 கிலோ உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் 2 கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஷவர்மா விற்பனைக் கூடங்களுக்கு ரூ.20,000 அபராதம்; உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.