ETV Bharat / city

திருச்சியில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை: இளைஞர் தலைமறைவு, மூவர் கைது

author img

By

Published : Nov 28, 2021, 10:01 AM IST

Updated : Nov 28, 2021, 10:17 AM IST

பாலியல் தொல்லை கொடுத்ததாக 17 வயது சிறுமி அளித்த புகாரின்பேரில், காவல் துறையினர் தலைமறைவான இளைஞரைத் தேடிவரும் நிலையில், மூவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

திருச்சி: துவரங்குறிச்சி அருகே இருப்பது 17 வயது சிறுமி. இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் ஈச்சம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, ஆறு மாதங்களாகப் பழகிவந்துள்ளனர்.

இந்நிலையில் இளைஞர் சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி கடந்த மாதம் விராலிமலைக்கு அழைத்துச்சென்று அவருடன் உறவில் இருந்துள்ளார். இதையடுத்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது இளைஞரின் பெற்றோர் சிறுமிக்கு 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்துவைப்பதாகக் கூறி சிறுமியைக் கொண்டுபோய் அவரது வீட்டிலேயே விட்டுவரும்படி கூறியுள்ளனர். அதன்படி சிறுமியை இளைஞர் அவரது வீட்டில் விட்டுள்ளார்.

அதன்பின் அந்த இளைஞருக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் பெண் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதனையறிந்த அந்தச் சிறுமி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளைஞர், அவரது தந்தை, தாய், பெரியப்பா உள்ளிட்ட நான்கு பேர் மீதும் புகார் அளித்தனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் தலைமறைவான இளைஞரைத் தவிர மற்ற மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Chennai Crime: 5 நாள் குழந்தையை விற்ற தாய்; விற்ற பணமும் பறிப்பு

Last Updated : Nov 28, 2021, 10:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.