ETV Bharat / city

கோவில்பட்டியில் ரூ.2.50 லட்சம் புகையிலை பொருள்கள் பறிமுதல்

author img

By

Published : Jul 16, 2021, 6:59 AM IST

கோவில்பட்டியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர்.

கோவில்பட்டியில் 2.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
கோவில்பட்டியில் 2.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில் புகையிலை பொருள்கள் வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தனிப்பிரிவு காவலர் சேதுராஜன் மந்தித்தோப்பு துளசிங்க நகர் பகுதியில் சோதனை மேற்கொண்டார்.

அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் புகையிலை பொருள்கள் இருந்தன. உடனடியாக அங்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் ஆய்வாளர் சபாபதி, உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் சோதனை செய்தனர்.

அப்போது ரூ.2.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்த அன்னைதெரசா நகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.