ETV Bharat / city

பூக்களின் விலை உயர்வு - நெல்லையில் ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1,500க்கு விற்பனை!

author img

By

Published : Apr 13, 2022, 6:29 PM IST

தமிழ்ப்புத்தாண்டையொட்டி, திருநெல்வேலி மலர்ச்சந்தையில் பூக்களின் விலை அதிகரித்து பிச்சிப் பூ கிலோவிற்கு ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுவதால் பூ விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பட்ரோஸ்
பட்ரோஸ்

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் நெல்லை பூச்சந்தைகளில், பூக்களின் வரத்து அதிகரிக்கத்தொடங்கியது. இதன்காரணமாக கடந்த சில தினங்களாகவே பூக்களின் விலை குறைவாக காணப்பட்டது.

இந்த நிலையில் நாளைய தினம் விசு, தமிழ்ப் புத்தாண்டு பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் நெல்லை மலர்ச்சந்தைகளில் பூக்களின் விலை அதிகரித்துக்காணப்படுகிறது.

மலர்ச்சந்தையில் பூக்களின் விலை உயர்வு

நேற்றைய நிலவரப்படி, மல்லிகைப்பூ கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் கிலோ ரூ.700 முதல் 800 வரையில் விற்கப்படுகிறது.

பிச்சிப்பூ கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் கிலோ ரூ.1,500-க்கும், கேந்தி பூ கிலோ ரூ.80-க்கும், சேவல் கொண்டை பூ ரூ.60-க்கும், அரளிப்பூ ரூ.100-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், நாட்டுச்சம்பங்கி ரூ.300-க்கும், பன்னீர் ரோஜா கிலோவிற்கு ரூ.80-க்கும், பட்ரோஸ் ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பண்டிகை காலம் என்பதால் வழிபாடு நடத்துவதற்காக பொதுமக்கள் காலை முதலே நெல்லை சந்திப்பு மலர்ச் சந்தையில் பூக்களை வாங்க அதிகமான அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், பூ விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: தோவாளை மலர் சந்தையில் பூ விலை கடும் உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.