ETV Bharat / city

'அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம்' - ஓபிஎஸ் பெருமிதம்

author img

By

Published : Dec 27, 2019, 1:36 PM IST

மதுரை: அனைத்துத் துறைகளிலும் பொது நிர்வாகத்தில் தமிழ்நாடு அரசு முதலிடம் வகிக்கிறது என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி
மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது சொந்த மாவட்டமான தேனிக்குச் சென்று தனது வாக்கினை பதிவு செய்யவுள்ளார்.

மதுரை விமான நிலையத்திற்கு வந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பொதுமக்கள் அதிமுக வேட்பாளர்களை வெகுவாக ஆதரித்து வருகிறார்கள்.

மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி

இந்தியாவிலேயே அதிமுக ஆட்சியில் இருக்கும் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறைகளிலும் முதலிடம் வகிக்கிறது. அதுமட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் பொது நிர்வாகத்தில் தமிழ்நாடு அரசு முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுகின்றது என்பது உறுதியாகியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:

இந்த தசாப்தத்தின் மிகப் பிரலமான டீனேஜர் யார் தெரியுமா ?

Intro:*அனைத்து துறைகளிலும் ஒட்டுமொத்தமாக பொது நிர்வாகத்தில் தமிழக அரசு முதலிடம் - O.பன்னீர்செல்வம் பேட்டி*Body:*அனைத்து துறைகளிலும் ஒட்டுமொத்தமாக பொது நிர்வாகத்தில் தமிழக அரசு முதலிடம் - O.பன்னீர்செல்வம் பேட்டி*

*மதுரை விமான நிலையத்தில் தமிழக துணை முதல்வர் O.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;*

உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது . அதிமுக வேட்பாளர்களை பொது மக்கள் வெகுவாக ஆதரித்து வருகிறார்கள். அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது .

அனைத்து துறைகளிலும் ஒட்டுமொத்தமாக பொது நிர்வாகத்தில் தமிழக அரசு முதலிடத்தில் உள்ளது.இதன் மூலம் தமிழக அரசியல் நல்லாட்சி நடைபெறுகின்றது என்பதை உறுதி செய்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.