ETV Bharat / city

'பகைக்கு வயது ஒன்று' - மதுரையை மிரட்டும் கொலைவெறி போஸ்டர்

author img

By

Published : Jan 13, 2020, 8:37 PM IST

மதுரை: இறந்தவரின் நினைவு நாளை முன்னிட்டு, "பகைக்கு வயது ஒன்று" என தலைப்பிட்டு நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மதுரையை மிரட்டும் கொலைவெறி போஸ்டர்
மதுரையை மிரட்டும் கொலைவெறி போஸ்டர்

மதுரை மாவட்டத்திலும் நகர்ப்புறங்களிலும் அவ்வப்போது கொலைவெறி கும்பல்களால் அசம்பாவிதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.

அண்மை காலமாக பழிக்குப்பழி வாங்கும் கொலை சம்பவங்கள் குறைந்திருந்தாலும் மாநகர் பகுதிகளில் அவ்வப்போது இறந்தவர்கள் நினைவு நாளை முன்னிட்டு எதிர் தரப்பினரை அச்சுறுத்தும் வகையில் பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தோடு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்படுகின்றன.

மதுரையை மிரட்டும் கொலைவெறி போஸ்டர்

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனியார் கல்லூரி வாசலில், கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை செய்தவரை பழி தீர்க்கப் போவதாக கல்லூரி மாணவனின் நண்பர்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மீண்டும் மதுரை மாநகரில் பல இடங்களில் டயர் சுரேஷ் என்பவரின் நினைவு நாளை முன்னிட்டு, ''பகைக்கு வயது ஒன்று'' வசனம் தேவையில்லை வரலாறு பேசும் என்ற தலைப்பில் அவருடைய நண்பர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

பெண் குழந்தை கடத்தல் - சென்ட்ரலில் அதிர்ச்சி நிகழ்வு!

Intro:பகைக்கு வயது ஒன்று - மதுரையை மிரட்டும் கொலைவெறி போஸ்டர்

பகைக்கு வயது ஒன்று என தலைப்பிட்டு மதுரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு. மீண்டும் பழிவாங்க காத்திருக்கும் கொலைக் கும்பலின் கைவரிசையா? மக்கள் பீதிBody:பகைக்கு வயது ஒன்று - மதுரையை மிரட்டும் கொலைவெறி போஸ்டர்

பகைக்கு வயது ஒன்று என தலைப்பிட்டு மதுரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு. மீண்டும் பழிவாங்க காத்திருக்கும் கொலைக் கும்பலின் கைவரிசையா? மக்கள் பீதி

மதுரை மாவட்டத்திலும் மதுரை நகர்ப்புறங்களிலும் அவ்வப்போது கொலைவெறி கும்பல்களால் அசம்பாவிதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.

அண்மை காலமாக பழிக்குப்பழி வாங்கும் கொலை சம்பவங்கள் குறைந்திருந்தாலும் எதிரிகளை அச்சுறுத்தும் வகையில் மாநகர் பகுதிகளில் அவ்வப்போது இறந்தவர் நினைவு நாளை முன்னிட்டு எதிர் தரப்பினரினரை அச்சுறுத்தும் வகையில் பழிக்கு பழி வாங்கும் நோக்கோடு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் அங்காங்கே ஒட்டப்படுகின்றன.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனியார் கல்லூரி வாசலில் கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை செய்தவரை பழி தீர்க்கப் போவதாக கல்லூரி மாணவனின் நண்பர்களால் ஒட்டப்பட்ட சுவரொட்டி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்நிலையில், மீண்டும் மதுரை மாநகரில் பல இடங்களில் டயர் சுரேஷ் என்பவரின் நினைவு நாளை முன்னிட்டு ''பகைக்கு வயது ஒன்று'' வசனம் தேவையில்லை வரலாறு பேசும் என்ற தலைப்பில் அவருடைய நண்பர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.