ETV Bharat / city

மதுரையில் இயற்கை கண்காட்சி எப்போது?

author img

By

Published : Jul 18, 2019, 12:30 AM IST

மதுரை: இயற்கை முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் விதமாக 'மண் மணக்கும் தூய்மை மதுரை' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கண்காட்சி வரும் 19-21ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது என மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் தெரிவித்துள்ளார்.

madurai commisioner visakan

இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் கூறுகையில் "மதுரை மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி இணைந்து, வரும் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை, மதுரை தமுக்கம் மைதானத்தில் இயற்கையின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாக "மண் மணக்கும் தூய்மை மதுரை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு கண்காட்சியை நடத்த இருக்கிறது.

இந்த கண்காட்சியில் திடக்கழிவு மேலாண்மை, மழை நீர் சேகரிப்பு வழிமுறைகள், வீட்டுத்தோட்டம், இயற்கை பொருட்கள், உணவுகள் என பல்வேறு தலைப்புகளுக்கு ஏற்ப அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

இயற்கை பெருவிழா போட்டிகள் 2019 என்ற தலைப்பில் இளைஞர்களுக்கான விழிப்புணவு போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், மதுரையை தூய்மை நகராகவும், இயற்கை மிக்க நகராக மாற்றுவது தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடைபெறும்.

இந்த பணிகளுக்காக அகற்றும் மரங்களை மாற்று இடங்களில் நடவு செய்வதற்கு மாநகராட்சி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மேலும் தனியார் அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து மாநகராட்சி பகுதிகளில் அதிக மரங்கள் வளர்ப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம்" என்றார்.

Intro:சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் மரங்கள் மாற்று இடத்தில் நடப்படும் மதுரை மாநகராட்சி ஆணையர்

சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்படும் மரங்களை மாற்று இடத்தில் நடவு செய்து பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகின்றது. என மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் பேட்டி.Body:சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் மரங்கள் மாற்று இடத்தில் நடப்படும் மதுரை மாநகராட்சி ஆணையர்

சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்படும் மரங்களை மாற்று இடத்தில் நடவு செய்து பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகின்றது. என மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் பேட்டி.

மதுரை மாநகராட்சி பகுதியினை தூய்மை மிக்க நகராக மாற்றுவது தொடர்பாக மதுரை தமுக்கம் மைதானத்தில் மதுரை மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி இனைந்து கண்காட்சி நடைபெறுவது குறித்து, மாநகராட்சி ஆணையாளர் விசாகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மதுரை மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி இணைந்து, வரும் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை, மதுரை தமுக்கம் மைதானத்தில் இயற்கையின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாக "மண் மணக்கும் தூய்மை மதுரை" என்ற தலைப்பில் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெறுகின்றது.

இந்த கண்காட்சியில் திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு வழிமுறைகள், வீட்டுத்தோட்டம், இயற்கை பொருட்கள், மற்றும் உணவுகள் என பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

மேலும் "இயற்கை பெருவிழா போட்டிகள் 2019" என்ற தலைப்பில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான விழிப்புணவு போட்டிகளும் நடைபெற உள்ளன, மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், மதுரையை தூய்மை நகராகவும், இயற்கை மிக்க நகராக மாற்றுவது தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

மேலும் நகரில் தற்போது சாலை விரிவாக்கம் மற்றும் பாலம் அமைக்கும் பணி என்பது தவிர்க்க முடியாத ஒன்று, இந்த பணிகளுக்காக அகற்றும் மரங்களை மாற்று இடங்களில் நடவு செய்வதற்கு மாநகராட்சி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது, மேலும் இப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் இது குறித்து அறிவுறுத்தப் பட்டுள்ளது, மேலும் தனியார் அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து மாநகராட்சி பகுதிகளில் அதிக மரங்கள் வளர்ப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் என்று தெரிவித்தார்.

மேலும் மாநகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.