ETV Bharat / city

நிலவு, மின்னொளியில் மிதந்த தெப்பம் - கண்கொள்ளாத மதுரை தெப்பத்திருவிழா!

author img

By

Published : Jan 28, 2021, 10:44 PM IST

மதுரை: தெப்பத் திருவிழாவில் நிலவு ஒளியிலும் மின்னொளியிலும் மிதந்த தெப்பத்திலிருந்து அன்னை மீனாட்சியும் ஆலவாய்ச் சொக்கரும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

madurai
madurai

தைப்பூசத்தை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் உற்சவ திருவிழாவான இன்று (ஜன. 28) மீனாட்சியும் சொக்கரும் பிரியாவிடையோடு வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினர்.

நிலவு, மின்னொளியில் மிதந்த தெப்பம் - கண்கொள்ளாத மதுரை தெப்பத்திருவிழா
இன்று காலை 11 மணியளவில், முதல் சுற்றாக தெப்பத்தில் வலம்வந்த திருசப்பரம், சற்றேறக்குறைய 12 மணியளவில் மரகதவல்லி முக்தீஸ்வரர் ஆலயத்தின் எதிரே நிலைக்கு வந்தது. அதேபோன்று பிற்பகலிலும் சப்பரத்தில் மீனாட்சியும் சொக்கரும் பிரியாவிடையுடன் வலம்வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.
மதுரை
நிலவு, மின்னொளியில் மிதந்த தெப்பம்
மதுரை தெப்பத் திருவிழாவைப் பொறுத்தவரை இரவில்தான் மின்னொளியில் மட்டுமன்றி பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில், தெப்பத்தைச் சுற்றி விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிவெள்ளத்தில் சப்பரம் வலம்வரும் காட்சியை பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கண்டு மகிழ்வது வழக்கம்.
அதேபோன்று இன்றும் மூன்றாவது சுற்றாக இரவு 8 மணியளவில் ஒளி வெள்ளத்துடன் தெப்பத்தில் வலம்வந்த சப்பரம் இரவு 9 மணியளவில் மீண்டும் நிலைக்கு வந்தது. பக்தர்கள் அனைவரும் இந்த கண்கொள்ளா காட்சியைக் கண்டு அம்மன் மற்றும் சாமியை தரிசனம்செய்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.