ETV Bharat / city

காதலியை தினமும் பேச சொல்லுங்கள் - சிவபெருமானுக்கு கடிதம் எழுதிய பக்தர்..!

author img

By

Published : Oct 5, 2021, 9:30 PM IST

தான் காதலிக்கும் பெண்ணை தன்னோடு நாள்தோறும் பேச சொல்லுங்கள் என சிவபெருமானுக்கு மதுரை அருகே பக்தர் கடிதம் எழுதியுள்ளார்.

சிவபெருமானுக்கு கடிதம் எழுதிய பக்தர்
சிவபெருமானுக்கு கடிதம் எழுதிய பக்தர்

மதுரை: அவனியாபுரம் பகுதியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கிபி 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு தினமும் வெங்கடேசன் என்ற பக்தர் ஒருவர் முகவரி குறிப்பிடாமல் கடிதம் எழுதி வருகிறார்.

பக்தர் வெங்கடேசன் இன்று (அக்.5) எழுதியுள்ள அந்தக் கடிதத்தின் முன்பகுதியில் 'தினம் எனக்கு போதுமான வருமானம் தாருங்கள்' என்று எழுதப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அதே கடிதத்தில் 'அம்மை அப்பா சரணம், மதுரை நாடார் பெண் அனுஷாவை என்னுடன் தினம் தினம் பலமுறை பேச வையுங்கள். இப்படிக்கு வெங்கடேசன்' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிவபெருமானுக்கு கடிதம் எழுதிய பக்தர்
சிவபெருமானுக்கு கடிதம் எழுதிய பக்தர்

அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகம்

இந்த கடிதம் கோயில் நிர்வாகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முகம் தெரியாமல் வெங்கடேசன் என்ற பெயரில் தினமும் கடிதம் எழுதி அனுப்பி வைத்த அந்த நபர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியாமல் கோயில் நிர்வாகத்தினர் குழப்பத்தில் உள்ளனர். காதலியை தன்னோடு பேசச் சொல்லி சிவபெருமானுக்கு எழுதிய இந்த விநோத கடிதம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:லக்கிம்பூர் விவசாயிகள் மீது கார் ஏறிய அதிர்ச்சி காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.