ETV Bharat / city

நீட் தேர்வு முறைகேடு.. வேறு மாநிலத்தில் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா?

author img

By

Published : Mar 12, 2021, 5:43 PM IST

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வேறு மாநிலத்தில் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா என்பது குறித்து சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

any-neet-malpractice-cases-pending-in-other-state-madurai-hc
any-neet-malpractice-cases-pending-in-other-state-madurai-hc

கேரளா மாநிலம் உன்னியாலைச் சேர்ந்த ரஷீத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணைக் கோரி மனு தாக்கல் செய்தார். அதில்," நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக பல மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் எனது பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்ததாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும், உறுதியாக ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குறித்த விவரங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்பட்டு, அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் கைதுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே எனக்கு பிணை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பிணை அளிக்கும் பட்சத்தில் அனைத்து விசாரணைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை கட்டுப்படுகிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் நீதிபதி, நீட் தேர்வு எழுதும் விரும்பும் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அவர்களின் கை ரேகையை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பின்னர் அவர்கள் தேர்வு எழுதும் போது கை ரேகையை சரிபார்க்க வேண்டும். இதனை அலுவலர்கள் பரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

அதையடுத்து அவர், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வேறு மாநிலத்தில் ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா என்பது குறித்து சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: மதம் மாறியவர்கள் குறிப்பிட்ட வார்டுகளில் போட்டியிட தடைகோரிய வழக்கு: தள்ளுபடி செய்த நீதி மன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.