ETV Bharat / city

தொடர்மழை காரணமாக தக்காளி விலை மீண்டும் உயர்வு!

author img

By

Published : Sep 5, 2022, 5:00 PM IST

தொடர் மழை காரணமாக தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் தக்காளிகளை விவசாயிகளிடமிருந்து மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்வார்கள்.

கொள்முதல் செய்யபடும் தக்காளிகள் லாரிகள் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட கேரள மாநிலப்பகுதிகளுக்கும் விற்பனைக்கு செல்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வியாபாரிகள் தக்காளியை விலை 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடர்மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, மகசூல் குறைந்துள்ளது.

இதனால், தக்காளி கொள்முதல் விலை உயர்ந்து, தற்போது ஒரு கிலோ தக்காளி 28 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். இதன் காரணமாக தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தக்காளி ஒரு கிலோ ரூபாய் 35 முதல் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்மழை காரணமாக தக்காளி விலை மீண்டும் உயர்வு!

தொடர் மழை காரணமாக, தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாகவும், ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் தக்காளியின் தேவை அதிகரித்து, அதன் விலை மேலும் உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தமிழ் பெண்ணை கரம்பிடித்த வங்கதேச பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.